புதுதில்லி, டிச.13- ஒவ்வொன்றையும் நீதிமன்றம் தலையிட்டு கூற வேண்டும் என்று தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நினைக் கிறாரா? என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதி மன்றம் அமர்வு கேள்வி எழுப்பியுள் ளது.
மசோதா ஒப்புதல் வழங்காத விவ காரத்தில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் புதனன்று விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “இரண் டாவது முறை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் அவசர அவ சரமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்று வாதம் வைத் தார்.
அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “இந்த விவகாரம் குடியரசுத் தலைவரிடம் சென்றுவிட்டதால் அவ ருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட முடியாது” என்று குறிப்பிட்டார். அதே நேரம், “ஆளுநரும் முதல்வரும் சந் தித்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம். அதை ஏன் செய்ய வில்லை” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழக அரசுத் தரப்பில், ஆளு நரை சந்திக்க முதல்வர் தயாராகவே இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் தரப்பில் தாங்களும் முதல்வருடன் ஆலோசனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, “உச்சநீதிமன்றம் சொன்னதால் பேச்சுவார்த்தைக்கு வரு கிறோம் என ஆளுநர் தரப்பில் ஏன் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆளுநர் தரப்பில் ஏதாவது சில முன்னேற்றங்களை எதிர் பார்க்கிறோம். ஏன் எல்லா விவகாரங் களிலும் நீதிமன்றம் தலையிட வேண் டும் என ஆளுநர் நினைக்கிறார்? அனைத்தையும் நீதிமன்றமே சொல் லிக் கொண்டு இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஆளுநரே தாமாக முன் வந்து முதல்வரை சந்தித்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சனை யைத் தீர்க்க முடியும். விரைவில் ஆளு நர் - முதல்வர் சந்திப்பு நிகழ வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம். இதன் மூலம் சர்ச்சைகளை சரி செய்ய வேண்டும்” எனவும் அறிவுறுத்தினார். மேலும், வழக்கு விசாரணையை ஜன வரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.