ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 5-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் மண்டலத் தலைவரான ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை சோதனை செய்ய சென்றது. சோத னைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் காயமடைந்த நிலை யில், ஷாஜகான் ஷேக் தற்பொழுது தலை மறைவாக உள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மேற்குவங்க ஆளுநர் சி.ஆனந்தபோஸ் அறிக்கை மூலம் அம்மாநில காவல் துறைக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத் துள்ளார். அதில், “மேற்குவங்க காவல்துறை ஷாஜகான் ஷேக்கை தப்பிக்கவிட்டு கண்ணாமூச்சி ஆடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் முயல்களுடள் ஓடுவதையும், வேட்டை யாடுபவர்களை (அமலாக்கத்துறை யினர்) வேட்டையாடுவதையும் நிறுத்த வேண்டும். காற்றை விதைத்து சூறாவளி யை அறுவடை செய்யாதீர்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார்.