india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சண்டிகர்
“இனிமேலாவது கவனமாக பேச வேண்டும்”
பாஜக எம்.பி. கங்கனாவுக்கு
சிரோமணி அகாலி தளம் எச்சரிக்கை

இந்தி திரையுலகில் முன்னணி நடி கையாக உள்ள கங்கனா ரணாவத் நடந்து முடிந்த மக்களவை தேர்  தலில் இமாச்சலப்பிர தேசத்தின் மண்டி தொகு  தியில் பாஜக சார்பில்  போட்டியிட்டு கடும் போராட்டத்துக்கு இடையே சொற்ப வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடிய நிலையில், கங்  கனா மட்டுமே கன்னத்தில் அடி வாங்கி  சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜூன் 7 அன்று  சண்டிகர் விமான நிலையத்திற்கு இறங் கிய பொழுது அங்கு பாதுகாப்புக்கு இருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எப்  பெண் காவலர், கங்கனாவின் கன்னத்தில்  திடீரென பளார் என்று அறைவிட்டார். 

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்றும் போராட்டத் தில் ஈடுபட்ட பெண்களை 100 ரூபாய்க்  காக வந்தவர்கள் என்று கங்கனா கூறி னார்; விவசாயிகளின் போராட்டத்தில் எனது தாயும் இருந்தார். அதனால் தான்  அறைந்தேன்” என பெண் கலைஞர் கூறினார். 

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த குல்வீந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்  பட்டு, கைது செய்யப்பட்ட நிலையில்,  பாஜக எம்பி கங்கனாவை அறைந்த குல்  வீந்தர் கவுருக்கு ஆதரவாக நாங்கள்  இருக்கிறோம் என பஞ்சாப், ஹரியானா  விவசாயிகள் அறிவித்து குல்வீந்தர் கவு ருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், “இனிமேலாவது கவ னமாக பேச வேண்டும்” என கங்கனா வுக்கு பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர் பாக அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங்  பாதல்,”கங்கனா பேசியது தவறு தான். இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம். இனிமேலா வது கங்கனா ரணாவத் தனது பேச்சில் கவ னமாக இருக்க வேண்டும்” என எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

ராய்பூர்
பசுக் குண்டர்கள் மீண்டும் தாக்குதல்
சத்தீஸ்கரில் 2 பேர் அடித்துக் கொலை

சத்தீஸ்கரில் பசுக் கடத்தலில் ஈடுபட்ட தாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் பசுக் குண்டர்களால் அடித்  துக் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம்  அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்கள் சஹரன்பூரைச் சேர்ந்த குட்டு கான் (35) மற்றும் சந்த்மியா  கான் (23) என அடையாளம் காணப்  பட்டுள்ளனர். சதாம் குரேஷி என்பவர்  (23) ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு  கும்பல் தாக்குதல் என்று உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி னர். கோவில் நகரம் என்று அழைக்கப்படும் அரங்கில் ஜுன் 7 வெள்ளியன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மூவரும் எருமை மாடுகளுடன் லாரி யில் ராய்ப்பூருக்கு சென்று கொண்டி ருந்தனர். பசு கடத்தல் என சந்தேகித்து, சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மகா சமுந்த் அரங்க் சாலையில் பட்டேவாவில் இருந்து லாரியை பின்தொடர்ந்தது. மகா நதி அருகே பாலத்தில் வாகனத்தை தடுத்து நிறுத்தி தாக்கினர். தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு சென்றபோது ஒருவர் உயிரி ழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர். அதில் ஒருவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த கும்பல் அவர்களை இரண்டு மணி நேரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்  சம்பவம் குறித்து விசாரணை நடத்த 14 பேர் கொண்ட விசாரணைக் குழு  அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

லக்னோ
வடமாநிலங்களில் தீவிரமடையும் 
நீட் தேர்விற்கு எதிரான போராட்டம்

நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டைப் போல பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிர மாநில அரசும் நீட் தேர்விற்கு  எதிராக களமிறங்கியுள்ளது. மகா ராஷ்டிராவின் பெரும்பாலான இடங்களில்  நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதே போல  தில்லி, உத்தரப்பிரதேசம், மத்தி யப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும்  வடமாநிலங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட் டம் நாடு முழுவதும் தீவிரமடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்

இன்று கூடுகிறது கேரள சட்டமன்றம்

பட்ஜெட், பஞ்சாயத்துராஜ் திருத்த சட்  டம் 2024 நிறைவேற்றம், புலம்  பெயர்ந் தோரின் அமர்வான கேரள  சபைக் கூட்டம் போன்ற நிகழ்ச்சி நிரல்களு டன் கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஜுன்  10 திங்களன்று துவங்கி ஜுலை 25 வரை நடை பெற உள்ளது.

கேரள சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி  மாதம் நிதி அமைச்சர் கே.என்.பால கோபால் பட்ஜெட் சமர்ப்பித்தார். மக்கள வைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து  இந்த கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிறன்று நடந்த செய்தி யாளர்கள் சந்திப்பின்போது சபாநாயகர் ஏ.என்.சம்சீர் கூறுகையில், கேரள சட்டப் பேரவைக் கூட்டம் ஜுன் 10 திங்களன்று துவங்கி ஜுலை 25 வரை நடைபெற உள்  ளது முதல் மூன்று நாட்கள் சட்டமன்ற நட வடிக்கைகளுக்குப் பிறகு ஜுன் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் கேரள சபை நடை பெறும். அதைத் தொடர்ந்து பட்ஜெட்  மீதான விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும்  என்றார்.

முன்னதாக பஞ்சாயத்துகள், நகராட்சி கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்பு களில் உள்ள வார்டுகளின் வரம்பு நிர்ண யம் தொடர்பான சட்ட வரைவுக்கு வெள்ளி யன்று நடந்த அமைச்சரவை ஒப்புதல்  அளித்தது. 15ஆவது கேரள சட்டசபையின்  11ஆவது கூட்டத்தொடரை அறிவிக்க ஆளு நர் ஆரிப் முகமது கானுக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்தது. 2024-25 நிதி யாண்டுக்கான முழு பட்ஜெட்டை விவா தித்து நிறைவேற்றுவதற்காக கூட்டப்படும் இந்த அமர்வு, ஜூலை 25 வரை நடை பெற உள்ளதை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இம்பால்

மணிப்பூரில் புறக்காவல் நிலையத்திற்கு தீவைப்பு

மணிப்பூரின் கலவரத்திற்கு முடிவே  இல்லாத ஜிரிபாம் மாவட்டத்தில்  புறக்காவல் நிலையத்தின் மீது  தாக்குதல் நடத்தியவர்கள் தீவைத்து கொளுத்தினர்.

ஜிரி புறக்காவல் நிலையம் மற்றும் பல  வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மோதல்  தீவிரமடைந்ததையடுத்து, அப்பகுதியில் கூடுதல் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட னர். ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல்  போன மைதீ பிரிவினரின் சடலம் கண்டெ டுக்கப்பட்டதை அடுத்து இந்த மோதல் முற்றியது. முன்னதாக வியாழனன்று இரவு,  குக்கி பிரிவினரின் வீடு மற்றும் தேவா லயம் எரிக்கப்பட்டது. ஒருவர் ஆயுதம் ஏந்தி யவர்களால் கடத்தப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 239 பேர் ஜிரி டவுனில் உள்ள விளை யாட்டு வளாகத்தில் உள்ள முகாமுக்கு மாற்  றப்பட்டனர். மாவட்டத்தில் காலவரை யற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்  ளது. ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று  வரும் மைதீ மற்றும் குக்கி பிரிவு கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வரம்
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக 
வி.கே.பாண்டியன் அறிவிப்பு

ஒடிசாவில் மாநிலத்தின் தனிச்செய லராகவும், சிறப்புத் திட்ட ஆலோ சகராகவும் இருந்த தமிழ்நாட் டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் சமீபத்தில் ஐஏஎஸ் பதவி யை ராஜினாமா செய்து, ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார். வி.கே. பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்  நாயக்கிற்கு அரசியலில் உதவுவதற்காக  பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்த தாக கூறப்பட்ட நிலையில், நடந்து முடிந்த  சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில்  நவீன் பட்நாயக் உடன் தேர்தல் பிரச்சாரம்  உள்ளிட்ட அரசியல் பணியை கவனித்  தார். இதனிடையே வி.கே.பாண்டியன் -  நவீன் பட்நாயக் உறவை பிரச்சார பொரு ளாக எடுத்துக்கொண்ட பாஜக, நவீன்  பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே. பாண்டியன் என்றும், அடுத்த ஒடிசா  முதல்வராக ஒரு தமிழர் (வி.கே.பாண்டி யன்) வரலாமா என்றெல்லாம் பிரச்சா ரம் மேற்கொண்டு ஒடிசாவில் அதிக மக்க ளவை தொகுதியை கைப்பற்றியது மட்டு மல்லாமல், மாநிலத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.

25 வருடமாக ஒடிசாவை ஆண்ட நவீன்  பட்நாயக் சனியன்று, “வி.கே.பாண்டி யன் நல்ல மனிதர். ஆனால் அவர் எனது  அரசியல் வாரிசு இல்லை” என அறி வித்தார். தொடர்ந்து ஞாயிறன்று தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வி.கே.பாண்டியன் கூறு கையில், “எனக்கு எதிரான பரப்புரைகள்  பிஜூ ஜனதா தள வெற்றியை பாதித்தி ருந்தால் மன்னிப்பு கோருகிறேன். ஒடிசா வில் நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அர சியலுக்கு வந்தேன். பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வர வில்லை. மக்களுக்கு சேவையாற்றவே ஐஏஎஸ் பணிக்கு வந்தேன், அதன்மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன்” எனக் கூறினார்.