india

img

தேர்தல் கண்ணோட்டத்திலேயே தேசப்பாதுகாப்பினை அணுகும் பாஜக

நாட்டின் பாதுகாப்பினைக் கூட  பாஜக தேர்தல் கண்ணோட்டத் திலேயே அணுகுகிறது என  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்  ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர்  எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கடந்த 6 மாதங்களாக ரஜௌரி மற்றும்  பூஞ்ச் பகுதிகளில் நிலவி வரும் பயங்கர வாதச் செயல்கள் கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த  5 ஆண்டுகளாகவே ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மோசமாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு  பிறகு இன்று வரை 160-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயங்கரவாத தாக்குத லில் உயிரிழந்துள்ளனர். பணமதிப்பி ழப்பு, ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்  தஸ்தை நீக்கியது போன்ற நடவடிக்கை களால் பயங்கரவாதம் தடுக்கப்பட்டதாக பாஜக கூறிவருவது முற்றிலும் பொய் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவின் தேசநலன்களைப் பாது காப்பதற்கு கடற்கரைகளுக்கு செல்வ தும், சமூக ஊடகப் பிரச்சாரங்களும் மட்  டுமே போதுமானது என்று பிரதமர் மோடி  நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தேசப் பாதுகாப்பினைக் கூட பாஜக தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது. அக்னிபாத் திட்டம் குறித்த அறிவிப்பு  ராணுவ அதிகாரிகளுக்கே அதிர்ச்சிய ளித்ததாக முன்னாள் ராணுவ தளபதி  எம்.எம்.நரவனே தனது புத்தகத்தில் கூறி யுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.