india

img

உயர்நீதிமன்ற உத்தரவால் உறுதியான பாஜக தோல்வி

சண்டிகர், ஜன. 24 - சண்டிகர் மேயர் தேர்தலை ஒத்தி வைத்த அறிவிப்பை ரத்து செய்திருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றம், ஜனவரி 30 அன்று சண்டிகர் மேயர் தேர்தலை நடத்த அதிரடியாக உத்தர விட்டுள்ளது. சண்டிகர் மாநகராட்சி வார்டு உறுப்பி னர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 14 இடங்களும், பாஜகவுக்கு 12  மற்றும் காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத் தன. குதிரை பேரத்தை நடத்திய பாஜக, தலா ஒரு கவுன்சிலரை மற்ற இரு கட்சிகளி டமிருந்தும் விலைக்கு வாங்கியது.

மேயர் பொறுப்புக்கு வருபவரின் பதவிக்காலம் ஓராண்டு என்ற நிலையில், 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பாஜக- வைச் சேர்ந்தவர் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். மேயர் தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்காமல் இருந்தது. நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைந்துள்ள நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் இணைந்து சந்திக்க முடிவு செய்தன. தற்போது ஆம்  ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிர சுக்கு 7 கவுன்சிலர்களும் உள்ளதால் பெரும் பான்மை பலத்தோடு இந்த அணி இருக் கிறது.

மேயர் பொறுப்புக்கு ஆம் ஆத்மியும், மூத்த துணைமேயர் மற்றும் துணை மேயர் ஆகிய இரண்டிற்கும் காங்கிரசும் போட்டியிட ஒப்புக்கொண்டன. ஆனால், ஆபரேசன் தாமரை என்ற பெயரில் மீண்டும் பாஜக-வின் ‘விலைக்கு வாங்கும்’ பணி தொடங்கியது. தேர்தலுக் கான வாக்குப்பதிவு ஜனவரி 17, காலை 11 மணி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரம் வரையில் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்தது.

அது நிறைவேறாததால் தோல்வி நிச்சயம் என்ற நிலையில் தேர்தலை நடத்த இருந்த மூத்த கவுன்சிலருக்கு உடல் நிலை சரியில்லை. தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது என்று 10.30 மணிக்கு அனைத்து கவுன்சிலர்களின் அலைபேசிகளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தனர். தோல்வி பீதியால்தான் பாஜக இப்படிச் செய்திருக்கிறது.

இது மிகப்பெரிய ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியதுடன், தேர்தல் தேதியை ஜனவரி 18-இல் இருந்து பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சண்டிகர் துணை ஆணை யரின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஹரியானா நீதி மன்றம், ஜனவரி 30 அன்று சண்டிகர் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக் குப்பதிவை நடத்த உத்தரவிட்டுள்ளது.