பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் தொகுதி எம்பியாக இருப்ப வர் பாஜகவின் ரீட்டா பகுகுணா ஜோஷி. இவர் கடந்த 2012 உத்தரப்பிரதேச சட்ட மன்ற தேர்தலில் கிருஷ்ணா நகர் சட்ட மன்ற தொகுதியின் பாஜக வேட்பாள ராக களமிறங்கிய பொழுது, பிரச்சார நேர காலக்கெடுவை மீறி பொதுக்கூட்டத்தை கூட்டினார். இந்த தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பான வழக்கு லக்னோ மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டு களாக நடைபெற்று வந்தது. இந்நிலை யில், திங்களன்று ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு 6 மாத சிறைத்தண்டனையும், ரூ.1,100 அபராதமும் விதித்து லக்னோ மாவட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.