india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்தில் மழையும்,  வெயிலும் இயல்பைவிட அளவிற்கு அதிக மாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஞானவாபி மசூதியில் உள்ள கீழ்தள அறை யில் (தெற்கு) வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக மசூதி கமிட்டி சார்பில்  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு  சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற வானிலை செயற்கைக் கோள் பிப்ரவரி 17-ஆம் தேதி மாலை 4 மணி அள வில் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

வடமாநிலங்களில் குளிர் தாக்கம் அதிகரித் துள்ள நிலையில், இமயச்சாரலில் உள்ள  ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மைனஸ் அளவிற்கு கீழ் வெப்பநிலை சென்றுள்ள தால் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இத னால் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் இயல்புநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை  ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நேரடியாகத்  தொடர்பு இருப்பதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மான இந்து கோவிலை பிரதமர் மோடி வரும் 14-ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெதர்லாந்து நாட்டின் முக்கிய நகரான ரோட்டர்டாம் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான “விடுதலை” படத்தின் இரண்டு  பாகங்களும் திரையிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாகங்களையும் பார்த்து முடித்தவுடன் சர்வதேச திரைத்துறையினர் 5 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி உள்ளனர்.

வாரணாசி
“ஞானவாபி மசூதி” பெயர்களை அழிக்கும் இந்துத்துவா குண்டர்கள்
அம்பலமானது விஎச்பியின் நாடகம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்  தில் பிரதமர் மோடியின் தொகு தியான வாரணாசியில் உள் ளது பழம்பெரும் ஞானவாபி மசூதி. 17-ஆம் நூற்றாண்டில் இந்து கோவிலை இடித்துதான் ஞானவாபி மசூதியை முக லாய மன்னர் ஒளரங்கசீப் கட்டினார் என  விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு கள் குற்றம் சுமத்தி அயோத்தியை போன்று  பிரச்சனையை கொண்டு வந்தனர். 

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு  வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று  வரும் நிலையில், இந்திய தொல்லியல் துறை தனது ஆய்வறிக்கையில், “இந்து  கோவிலை இடித்துதான் ஞானவாபி மசூதி  கட்டப்பட்டுள்ளது” எனக் கூறியது. இதற்கு  முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தன. இந்நிலையில், புதனன்று  வாரணாசி நீதிமன்றம், “ஞானவாபி மசூதி யின் கீழ் தளத்தில் அடுத்த 7 நாட்களுக்குப்  பின்னர் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம்”  என சர்ச்சைக்குரிய வகையில் உத்தரவு பிறப்பித்ததது. 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்குப்  பின் ஞானவாபி மசூதியைச் சுற்றி துணை  ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வாரணாசியில் ஞானவாபி  மசூதி என அச்சிடப்பட்டிருக்கும் பெயர் பல கையை விஎச்பியைச் சேர்ந்த இந்துத்  துவா குண்டர்கள் அழிக்கும் வேலையை  தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் ஞான வாபி மசூதி விவகாரத்தில் தலையிட மாட்டோம்  என விஎச்பி தெரிவித்து இருந்  தது. ஆனால் தற்போது பெயர்ப் பலகை  அழிப்பு மூலம் விஎச்பியின் அந்த நாடகம் அம்பலமாகியுள்ளது.

புவனேஸ்வரம்
ஒடிசாவிலும் இந்திக்கு “செக்”
தயாராகிறது 
ஒடியா உலக மாநாடு

நாட்டின் கிழக்குப் பகுதி மாநில மான ஒடிசாவில் ஒடியா, இந்தி,  பெங்காலி உள்ளிட்ட மொழி கள் அதிகம் பேசப்படுகின்றன. முக்கிய  தாய்மொழியான ஒடியாவை பின்னுக்குத்  தள்ளி, இந்தியை ஒடிசாவின் தாய்மொழி யாக உருவாக்க புதிய கட்டமைப்பு உரு வாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத னால் தமிழில் செம்மொழி உலக மாநாடு  நடத்தப்பட்டது போல, ஒடியா மொழியை காக்க “ஒடியா உலக மாநாடு” நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியானது.  இந்த  “ஒடியா உலக முதல் மாநாடு” சனி யன்று  ஒடிசா தலைநகர் புவனேஸ்வ ரில் தொடங்குகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளு டன் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு  இந்தியை புறந்தள்ளும் நோக்கத்தி லேயே நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி மொழியை புறக்கணிக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுடன் ஒடிசாவும் இணைந்துள்ளது.

விஜயவாடா
ஆந்திர முதல்வர் 
ஜெகன் மோகனுக்கு நெருக்கடி

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர  மாநில சட்டமன்றத்திற்கும் தேர்  தல் நடைபெற உள்ளது. இதனால்  ஆந்திர அரசியல் களம் சூடுபிடித்து உள்ள  நிலையில், தேர்தலுக்கு தோராயமாக இன்னும் 2 மாதங்களே உள்ளது. இச்சூழ லில் 6,100 ஆசிரியர்களை பணியமர்த்து வதற்கான மாவட்டத் தேர்வுக்குழு தேர்வு களை அறிவிக்கும் முன்மொழிவுக்கு ஒப்பு தல் அளித்துள்ளது ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஆந்திர அமைச்சரவை.

“60 மாதங்களாக ஆட்சி செய்த ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, கடைசி 60  நாட்களில் சுமார் 6,000 ஆசிரியர் பதவி களுக்கான தேர்வை நடத்துவது ஏன்?”  என எதிர்க்கட்சிகள் கேள்விக் கணை களை தொடுத்துள்ளன. ஆசிரியர் நிய மனம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படு கிறதா? இல்லை மாவட்ட நிர்வாக தேர்  வுக்குழு நேரடி நியமனம் செய்கிறதா? என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர் பாக ஆசிரியர் பிரிவு தேர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் தேர்தல் நேரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்  மோகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.