india

img

ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலை மையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை தொ டர்ந்து புதிய ஆட்சி அமைப்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா ஆளுநர் மாளி கையில்  ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ண னிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னவிஸ் ஆகி யோர் உடனிருந்தனர்.

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் என பாஜக தலைமை தெரிவித்துள்ளதாகவும் இத னால் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் பாஜக விற்கும் முரண்பாடுகள் அதிகரித்துள்ள தாகவும் கூறப்படுகிறது. இதனை சமாளிக்க அமைச்சரவையில்  ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு ஒரு சில இடங்கள் கூடு தலாக கொடுக்கப்படலாம் என கூறப்படு கிறது.

மகா யுதி கூட்டணி 230 இடங்களில் வென்றுள்ள நிலையில்  132 இடங்களு டன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உரு வாகியுள்ளதால் இம்முறை பாஜக கூட்ட ணிக்கட்சிகளின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. ஷிண்டே வின் சிவசேனா  57, அஜித்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள் ளது குறிப்பிடத்தக்கது.