india

img

லாலு பிரசாத், தேஜஸ்விக்கு ஜாமீன் அமலாக்கத்துறை வழக்கில் தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரு மான லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே  அமைச்சராக இருந்தார். அப்போது ரயில் வேயில் வேலை வாங்கித் தருவதற் காக தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரித்து வரும் நிலை யில், அமலாக்கத்துறை லாலு பிரசாத்  மற்றும் பீகார் எதிர்க்கட்சித் தலைவரு மான தேஜஸ்வி உள்ளிட்ட 8 பேர் மீது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசா ரணை திங்களன்று தில்லி ரோஸ் அவெ ன்யூ நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தி ற்குப் பிறகு லாலு பிரசாத், தேஜஸ்வி, லாலு பிரசாத்தின் மற்றொரு மகன் தேஜ்  பிரதாப், மகள் மிசா பாரதி உள்பட 8 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணை தொ கையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணை யின் போது அவர்களை கைது செய்யக் கூடாது என்றும் தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட  விசாரணையை வரும் அக். 25 அன்றுக்கு ஒத்திவைத்தார்.