கொரோனா தொற்று காலங் களில் பரிசோதனைக் காக நாட்டு மக்களிடம் தொலைபேசி எண், ஆதார் எண், முக வரி உள்ளிட்ட தரவுகளை இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சேக ரித்தது. இந்த தரவுகள் அனைத்தும் ஐசி எம்ஆர் சர்வரில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், ஐசிஎம்ஆர் சர்வரில் இருந்து 81 கோடி இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி, பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிந்ததாகவும், இந்த தரவுகள் அனைத்தும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெ ரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான முதற்கட்ட சைபர் விசாரணையில் ஒடிஷா, ஹரியானா மாநி லங்களைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.