பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மாவட் டம் மிலாக் பகுதியில் உள்ளது சிலாய் பாரகான் கிராமம். இக்கிராமத்தில் செவ்வாயன்று தலித் மக்கள் அம்பேத்கர் புகைப்படத்துடன் கூடிய பெயர் பலகை வைக்க சிறியளவு விழா நடத்தினர். ஆனால் அதே கிராமத்தின் சாதி ஆதிக்க வெறியர்கள் இங்கு அம்பேத்கர் பெயர் பலகை வைக்கக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். “இது எங்கள் நிலம், நாங்கள் வைப்போம்?” என தலித் மக்கள் பதில் கூறிய நிலையில், அவர்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்கள் தாக்குதல் நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்ட னர். சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.