18வது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். (விரிவான செய்தி : 2)
இக்கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்களான கே.ராதாகிருஷ்ணன், சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் அரசியலமைப்புச் சட்ட நூலை கையில் ஏந்தியவாறு அவைக்குள் சென்றனர். கட்சியின் மற்றொரு எம்.பி.யான அம்ரா ராம், விவசாயிகள் போராட்டத்தை நினைவூட்டும் விதமாக டிராக்டர் ஓட்டியவாறு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.