india

img

“இந்தியா” கூட்டணிக்கு மட்டும் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்

மகாராஷ்டிராவில் ஆட்சி யை கவிழ்க்க ஷிண்டே மூலம் சிவசேனாவை இரண்டாக உடைத்தது பாஜக. பணம், பதவி ஆசை, பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சிய ஓடியவர்  களின் சிவசேனா ஒருபக்கமும், சிவசேனா நிறுவனர் பால்தாக் கரேவின் மகனான உத்தவ் தாக்க ரேவின் சிவசேனா என இரண்டாக சிதறியது. சிவசேனாவை அரசி யல் ஆதாயத்திற்காக உடைத்த ஷிண்டேவுக்கு உண்மையான சிவசேனா பெயரும், வில் அம்பு  சின்னமும் தேர்தல் ஆணையம் மூலம் வாங்கி தந்தது மோடி  அரசு. உண்மையான சிவசேனா வான உத்தவ் தாக்கரே தரப்பிற்கு  சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்ரே) என்ற பெயரில் புதிய  கட்சி பெயரும், “சுடர் (எரியும்  ஜோதி)” சின்னமும் வழங்கப்பட்  டது. போலி சிவசேனா (ஷிண்டே)  பாஜக பக்கம் உள்ள நிலையில், உண்மையான சிவசேனா மோடி  ஆட்சியை தகர்க்க “இந்தியா” கூட்டணியில் போராடி வரு கிறது.

இந்நிலையில், சிவசேனா (உத்தவ்) கட்சி தனது சின்ன மான “சுடர் (எரியும் ஜோதி)” சின் னத்திற்கு புதிய பாடல் ஒன்றை வெளியிட்டது. இந்த பாடலில்  இடம் பெற்றுள்ள “இந்து”, “ஜெய் பவானி” ஆகிய வார்த்தை கள் விதிகளுக்கு எதிரானது என்  றும், இதனை உடனடியாக நீக்க  வேண்டும் எனக் கூறி சிவசேனா  (உத்தவ்) கட்சிக்கு எச்சரிக்கை  நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்  தல் ஆணையம். தேர்தல் ஆணை யத்தின் நோட்டீஸிற்கு சிவசேனா  (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்  கரே,” பாடலிலிருந்து “ஜெய்  பவானி”யை நீக்கக்கோரு வது மகாராஷ்டிராவை அவமதிக்  கும் செயலாகும்” என கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு ஆதரவான செயல்பாடு
மக்களவை தேர்தலில் மதம் சார்ந்த நடவடிக்கைகள், வெறுப்பு பேச்சுக் கள், கடவுள் படத்தை வைத்து வாக்கு சேகரிப்பு, பிரச்சாரத்தின் பொழுது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை என பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் மூலம் பாஜகவினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. இதுதொடர்பாக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் புகார் அளித்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. ஆனால் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் மீது ஏதாவது புகார் என்றால் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் மின்னல் வேகத்தில் நோட்டீஸ் அனுப்புகிறது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் புகார் அளிக்காமலேயே “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவது சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தேர்தல் ஆணை யம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்து வரு கிறது.