தற்போதைய சிஏஜி நியமன முறைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளரை நியமனம் செய்யும் வழிமுறைகளுக்கு எதிராக அனுபம் குல்ஸ்ரேஷ்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தற்போது ஒன்றிய அமைச்சரவை செயலகம் அனுப்பும் பட்டியலில் இருந்து ஒருவரை பிரதமர் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து சி.ஏ.ஜி நியமனம் செய்யப்படுகிறார். எனவே, சி.ஏ.ஜி நியமன முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.