சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 22,38,827 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இந்த நிலையில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.75% பேரும், மாணவர்கள் 92.71% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 91.30% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75% பேர் தேர்ச்சி. விஜயவாடா மண்டலத்தில் 99.6% பேரும், சென்னை மண்டலத்தில் 99.3% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.