காங்கிரஸ் மூத்த தலைவ ரும், எம்பியுமான ராகுல் காந்தியின் 2-ஆம் கட்ட யாத்திரையான “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை” கடந்த மாதம் வன்முறை பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூரில் தொடங்கி அசாம், அருணாச்சலப்பிர தேசம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் வழியாக தற் போது ஒடிசா மாநிலத்திற்குள் நுழைந் துள்ளது.
அசாமில் பாஜகவின் தாக்குதல், பீகாரில் நிதிஷ் குமாரின் “பச் சோந்தி” அரசியல் தாவல், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கி ரஸ் ஆதரவு, ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான அம லாக்கத்துறை கைது நடவடிக்கை என பாஜகவின் இழிவான அரசிய லுக்கு பதிலடி கொடுக்கும் முனைப் பில் மக்கள் திரளாக கலந்து கொண்டு “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை”க்கு பிரம்மாண்ட ஆதரவு வழங்கினர்.
இதனால் இதுவரை சென்று வந்த அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வெள்ளத்திலேயே “இந்திய ஒற் றுமை நீதி யாத்திரை” மிதந்து வந் தது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பாஜக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வரும் நிலையில், ஜார்க் கண்டில் யாத்திரையின் பொழுது நாய் சாப்பிட மறுத்த பிஸ்கெட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்ட ருக்கு கொடுப்பதாக வீடியோவை வெளியிட்டு பாஜக கண்டனம் தெரி வித்துள்ளது.
இதனை இந்தி மற்றும் ஒரு சில ஊடகங்கள் சுமார் ஒரு மணிநேரம் “அதி முக்கிய” செய்தியாக வெளியிட்டன.
பாஜகவின் கூற்றில் உண்மையில்லை
யாத்திரையில் தனது நாயுடன் ஒருவர் கலந்து கொண்டார். கூட் டத்தை கண்டு நாய் மிரண்டதால் நாயை ராகுல் காந்தி வாங்கி அதற்கு பிஸ்கெட் கொடுத்தார். நாய் கூட் டத்தை கண்டு நடுங்கி பிஸ்கெட்டை உண்ணவில்லை. இதனால் பிஸ் கெட்டை உரிமையாளரிடம் கொடுத்து நாய்க்கு கொடுக்குமாறு கூறினார். இதுதான் நடந்தது. உடனே நாய்க்கு கொடுக் கப்பட்ட பிஸ்கெட்டை காங்கிரஸ் தொண்டருக்கு ராகுல் கொடுத்து விட்டார் என ஊதி கிளப்பி விட்டது பாஜக.
கும்லா மாவட்டத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவகாரத்திற்கு ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “நாய்க்கு பிஸ்கெட்டை கொடுத் தேன். நாய் நடுங்கியதால், உரிமை யாளரிடம் கொடுத்து நாய்க்கு கொடுக்குமாறு கொடுத்தேன். அதன் பிறகு நாய் பிஸ்கெட்டைச் சாப்பிட் டது. ஆனால் பாஜக இந்த சின்ன விஷயத்தை ஏன் பெரிதாக்கினார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை. பாஜகவுக்கு நாய்கள் மீது அப்படி என்ன பிரியம் எனத் தெரியவில்லை” என சிரித்து செய்தியாளர்கள் சந் திப்பில் விடைபெற்றார்.