நீதித்துறையானது நீதியை வழங்குவதற்குரிய திறமையை அறவே இழந்துவிட்டதா அல்லது மீண்டும் பிரகாசமாக ஒளிருமா என்பதற் கான ‘லிட்மஸ்’ ஆய்வாக (litmus test), இந்தத் தீர்ப்புக்காகப் பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். நீதித்துறை யின் மீதிருந்த நம்பிக்கைகள் 2022 ஆகஸ்ட் 15 அன்று, மனிதகுலத்திற்கு எதி ராக மிகவும் இழிவான முறையில் மிகவும் கொடூரமான குற்றங்களைப் புரிந்து ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த 11 கயவர்களை, ‘சன்ஸ்காரி பிராமணர்கள்’ என்று கூறி, குஜராத் அரசாங்கம் அவர்க ளின் தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு மாலை மரியாதை அளித்து வரவேற்றபோது, கணிசமான அளவிற்குக் குறைந்தது. பிரதமர் செங்கோட்டையில் நின்று பெண்களின் பாதுகாப்பையும், கவுரவத்தையும் பாது காக்கத் தவறியவர்களுக்கு எதிராக ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் இவ்வாறு 11 கயவர்களும், குஜராத் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு, மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள்.
2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களின்போது, 21 வயதுடையவ ரும், நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணாக வும் இருந்த பில்கிஸ் பானுவும், அவர்தம் குடும்பத்தினரும், தாங்கள் வன்முறை வெறியர்களால் தாக்கப்படுவோம் என பயந்து தங்கள் கிராமத்தைவிட்டு ஓடிக் கொண்டிருந்தவர்கள், மேற்படி அவர்கள் பின் தொடர்ந்து சென்று, அடுத்த நாள் அவர்களைச் சுற்றி வளைத்து, 3 வயது மகளையும், பிறந்து ஒரு நாளே ஆகி யிருந்த மற்றொரு குழந்தையையும் கொடூரமான முறையில் கொன்றார்கள். பில்கிஸ் பானுவையும், அவருடைய அம்மாவையும், அவருடைய நாத்தனாரு டன் சேர்த்து கும்பல் வல்லுறவுக்கு உள் ளாக்கி பின்னர் அனைவரையும் கொடூர மான முறையில் தாக்கியுள்ளார்கள். இதில் பில்கிஸ் பானு மட்டுமே உயிர் பிழைத்தார். அவரைக் காவல்துறையினர் கோத்ராவில் இருந்த கலவரத்தில் பாதிப்பு க்கு உள்ளானவர்கள் அடைக்கப்பட்டிருந்த முகாமுக்கு எடுத்துச் சென்றார்கள்.
பில்கிஸ் பானுவின் துணிவு மிக்க போராட்டம்
பில்கிஸ் பானு, தனக்கேற்பட்ட கொடு மைகளை விவரித்தபோது அது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகவும் மோச மானமுறையில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக, மிகவும் துணி வுடன் அவர் நடத்திய போராட்டத்திற்கு, சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்கள் பலரும் ஆதரவு அளித்தனர். குற்றம் புரிந்தவர்களுக்கு குஜராத் அரசாங்கம் அனைத்து விதமான பாது காப்பையும் அளித்து வந்தது. அவர்க ளின் மீதான வழக்கு, குஜராத் மாநிலத்திலி ருந்து, மகாராஷ்டிராவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், அங்கே நடைபெற்ற விசாரணை யில்தான் 2008இல் அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள்.
2017இல் மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் அவர்களுக்கு கீழமை நீதி மன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், அவர் கண்முன்னாலேயே முஸ்லீம்கள் மீது சங் பரிவார் கும்பல்கள் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலைகள் ஆயிரத்திற்கும் அதிகமாகும். அதில் ஒரேயொரு வழக் கில் இவ்வாறு நீதி கிடைத்திருக்கிறது. குஜராத் அரசாங்கம் இவ்வாறு அவர்க ளை விடுதலை செய்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், பல்வேறு மகளிர் அரசியல் செயல்பாட்டாளர்கள், கல்வி யாளர் ஒருவர், ஓய்வு பெற்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மற்றும் பில்கிஸ் பானு பல்வேறு ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த னர்.
சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களை இறுதிவரையிலும் பாது காத்திட, குஜராத் அரசாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் கடும் முயற்சிகளை மேற்கொண்டன.
இறுதியாக, 2024 ஜனவரி 8 அன்று, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புவியான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். இடையிலே குஜ ராத் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட தண்டனை பெற்றிருந்த வன்புணர்வா ளர்கள், கொலைகாரர்கள் 11 பேரையும் பதினைந்து நாட்களுக்குள் கைது செய்து, சிறையில் அடைத்திட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருப்பதன் மூலமாக, நீதிக்கான போராட்டங்களில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை மீண்டும் அளித்திருக்கிறது.
தண்டனை பெற்றவர்கள் புரிந்த குற் றங்கள் ‘மிகவும் கொடூரமானவை’ என்றும், ‘இயற்கைக்கு விரோதமா னவை’ என்றும் தீர்ப்புரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவற்றைக் கண்டுகொள் ளாத குஜராத் அரசாங்கத்தை, தீர்ப்புரை கடுமையாகக் கண்டித்திருக்கிறது. எனினும், அசாதாரணமான சூழ்நிலை களின் அடிப்படையில் இவ்வாறு சிறைக் கைதிகள் தண்டனைக்காலம் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அர சாங்கத்தால் கூறப்படுவதைச் சுட்டிக் காட்டி, “நாங்கள், குஜராத் அரசாங்கத் தால் அதிகாரங்கள் அபகரிக்கப்பட்டி ருப்பதன் அடிப்படையில் இவ்வாறு தண்டனை பெற்றுவந்தவர்களின் தண்ட னைக் காலம் கழிக்கப்பட்டிருக்கும் உத்த ரவுகளை ரத்து செய்கிறோம்,” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
அசாதாரணமான சூழ்நிலைகள் என்ன?
இவ்வாறு தீர்ப்புரை வழங்கப்படு வதற்கு இட்டுச் சென்ற அசாதாரணமான சூழ்நிலைகள் என்ன என்பதைக் கீழே தருகிறோம்:
2019இல் சிறைத்தண்டனை அனுப வித்து வந்தவர்களில் ஒருவனான, ராதேஷ் யாம் (Radheshyam) என்பவன், தன் சிறைத்தண்டனை காலத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குஜராத் உயரு ர்நீதிமன்றத்தை அணுகினான். தீர்ப்பு மகாராஷ்டிராவில் உள்ள நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்டிருப்பதால், மேற் படி ராதேஷ்யாம், மகாராஷ்டிராவில் உள்ள நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்று கூறி அவனுடைய மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்த ரவுக்கு எதிராக குஜராத் அரசாங்கம் மறு ஆய்வு மனு எதையும் தாக்கல் செய்திட வில்லை. அதற்குப் பதிலாக, ராதேஷ் யாம் மகாராஷ்டிர உயர்நீதிமன்றத்தை அணுகினான். அவனுடைய மனு, அவ னையும் இதர கயவர்களையும் தண்டித்த சிபிஐ நீதிமன்ற நடுவரால் நிராகரிக்கப் பட்டது. இந்த வழக்கைப் புலன் விசா ரணை செய்திட்ட காவல்துறையினரும் இவனது வேண்டுகோளை நிராக ரித்தனர்.
அதன்பின்னர், ராதேஷ்யாமும், குஜ ராத் அரசாங்கமும் 2021இல் உச்சநீதிமன் றத்தை அணுகினர். தண்டனைக் காலத் தைத் தள்ளுபடி செய்து அவர்களை விடுவித்திட குஜராத் உயர்நீதிமன்றத் தால் கேட்கப்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். அப்போது அவர்கள், மேலே கூறியபடி, குஜராத்திலும், மகா ராஷ்டிராவிலும் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களைக் கூறாமல் மறைத்துவிட்டனர். பின்னர், வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றத்தின் அமர்வாயம், இது தொடர் பாக 2014இன் திருத்தப்பட்ட கொள்கை யைவிட, (ஏனெனில் 2014ஆம் ஆண்டு திருத்தப்பட்ட கொள்கையின்படி கொலை மற்றும் வல்லுறவு குற்றங்களைச் செய்த வர்களின் தண்டனைக் காலத்தைத் தள்ளு படி செய்ய முடியாது.) 1992ஆம் ஆண்டு கொள்கையின் அடிப்படையில் அவர்க ளின் தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்வது குறித்து, பரிசீலனை செய்திட லாம் என்று கூறியது.
குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசின் சுறுசுறுப்பு
இவ்வாறு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பினைப் பெற்றபின், குஜராத் அர சாங்கம் சிறைத் தண்டனை பெற்றவர்க ளை விடுதலை செய்வதற்காக, நடை முறையில் இருந்துவந்த கொள்கைகளை யெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத் தையும் சுறுசுறுப்பாக மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 8ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரையானது, இதற்கு முன் உச்சநீதிமன்றத்தால் 2021இல் அளிக்கப்பட்ட தீர்ப்பானது, ராதேஷ்யாம் என்பவனாலும், குஜராத் அரசாங்கத்தாலும் முக்கியமான உண் மைகள் மறைக்கப்பட்டு, மோசடியான முறையில் பெறப்பட்ட தீர்ப்பு என்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“2022 மே 13 தேதியிட்ட இந்த நீதி மன்றத்தின் உத்தரவு செல்லுபடியற்றது என்றும் சட்டத்தின் பார்வையில் செல் லாதது என்றும் நாங்கள் கருதுகிறோம். இதன் விளைவாக, குஜராத் அரசு தன் னிச்சையாக செயல்படுவது, அதிகார வரம்பை அபகரிப்பதற்கும், தன்னிச்சை யை துஷ்பிரயோகம் செய்வதற்கும் ஒரு உதாரணமே தவிர வேறில்லை. இது ஒரு வினோதமான வழக்கு. எனவே, அவர்க ளின் தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்வதற்கு, குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரங்களை அபக ரித்ததன் அடிப்படையில், அவர்களின் தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே அந்த உத்தர வுகளை ரத்து செய்கிறோம்.”
ஆரம்பத்திலிருந்தே ஆதரவு
குஜராத் அரசாங்கம் ஆரம்பத்திலி ருந்தே குற்றமிழைத்தவர்களுக்கு ஆதர வாக, அவர்களுக்கு உடந்தையாக இருந்து வந்ததாலேயே, இந்த வழக்கு குஜராத் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதை, உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை, அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசிய மாகும்.
அதேபோன்றே 2021இல் உச்சநீதி மன்றத்தில் மோசடியாக தீர்ப்பைப் பெறுவதற்காக அவர்களுக்கு உடந்தை யாகவும் இருந்திருக்கிறது. இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா விற்கு மாற்றுவதற்கு வழிவகுத்த குஜராத் அரசு, ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள உண்மையை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசியம். 2021இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த மோசடியிலும் குஜராத் அரசாங்கம் ஒரு கூட்டாளியாக இருந்திருக்கிறது. ஒன்றிய அரசாங்கமும் தனது பங்கிற்கு முழு ஆதரவை வழங்கி யிருக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ரையில் குஜராத் அரசாங்கத்தையும், ஒன்றிய அரசாங்கத்தையும் கடுமை யாகக் கண்டித்திருப்பது தொடர்பாக இவற்றின் பிரதிநிதிகள் எவரும் எவ்வித வருத்தத்தையும் தெரிவித்திடவில்லை. பாஜக அரசின் உண்மையான மநுவாத முகம் தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராகவும், மனிதகுலத்திற்கு எதிராகவும் மிகவும் மோசமான முறையில் கொடூரமான குற்றங்களை செய்பவர்கள், மனுவா திகளின் தலைமையின்கீழ் உள்ள ஆட்சி யாளர்களால் தண்டனை எதுவும் பெற மாட்டார்கள் என்பதை அம்பலப் படுத்திட வேண்டும்.
மக்கள் மத்தியில் அடையாள அரசியலைப் புகுத்தி கொடூர மான குற்றங்களை செய்பவர்கள் கண் டிக்கப்பட மாட்டார்கள் என்பது மட்டு மல்லாமல் அவர்கள் மாலை மரியாதை யுடன் கொண்டாடப்படுவார்கள் என்பதை யும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டிட வேண்டும்.
ஜனவரி 10, 2024,
தமிழில்: ச.வீரமணி