குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங் களில் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில், “தேர்தலுக்கான சுவரொட்டிகள் ஒட்டு தல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பா ளர்கள் குழந்தைகளைத் தங்கள் கை களில் வைத்திருப்பது, வாகனம் அல்லது பேரணிகளில் குழந்தையைத் தூக்கு வது உட்பட எந்த வகையிலும் குழந்தை களை தேர்தல் காலங்களில் பயன்படுத் தக்கூடாது” என அரசியல் கட்சிகள், வேட் பாளர்கள் மற்றும் தேர்தல் அமைப்பு களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தனது வழிகாட்டுதல்கள் மூலம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.