india

img

அயோத்தி தீர்ப்பு: உள்துறை செயலாளர் ஆலோசனை

புதுதில்லி,நவ.10- அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மதத் தலைவர்களு டன் மத்திய உள்துறை செயலா ளர் அஜித் தோவல் இரண்டாம் நாளாக ஞாயிறன்றும் ஆலோ சனை நடத்தினார். அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தும்  மசூதி கட்டுவதற்காக அயோத்தி யின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இந்த ஆலோசனை கூட்டத் தில் பாபா ராம்தேவ், சுவாமி பரமாத்மானந்த், ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர் மவுலானா கல்பே ஜாவத் உள்ளிட் டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

;