india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலை யில், பக்தர்களின் கூட்டத்தை சாதகமாக பயன்  படுத்திக் கொண்ட பிக்-பாக்கெட் திருடர்கள் போன், பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடியதாக புகார்கள் குவிந்துள்ளன.

ராமர் கோவில் திறக்கப்பட்ட நாளில் இந்துத் துவா குண்டர்கள் பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நிலையில், உத்த ரப்பிரதேச மாநிலம் பெரோஸாபாத் நகரில் ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 அன்று இஸ்லா மிய தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு “ராம் ரஹீம்” என்று பெயர் சூட்டி மத நல்லி ணக்கத்தை பேணியுள்ளனர். இஸ்லாமிய தம்பதி களின் இந்த செயலுக்கு பாராட்டு  குவிந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் அருகே ரயில்வே சிக்னல் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் 3 பேர் புறநகர் ரயில் மோதி உயிரிழந்தனர்.

மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலை யத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடு பாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளா னதில், விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 8 பேர் காயமடைந்தனர்.

கணவரை இழந்த 29 வார கர்ப்பிணியின் கருவைக் கலைக்க அனுமதி அளித்துப் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், இந்த முறை தொடர் பெங்களூரு மற்றும் தில்லியில் நடைபெற உள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளன.

நிதி, வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடும் சரி வினால் செவ்வாயன்று வர்த்தக நேரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

கடந்த வாரம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் அமலாக்கத்துறை விசா ரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

சோனி மற்றும் ஜீ இடையிலான இணைப்  புத் திட்ட ஒப்பந்தத்தை சோனி நிறு வனம் முறித்துக் கொள்வதாக அறிவித்த நிலை யில்,  ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு விலை 28.8% வீழ்ச்சி அடைந்து விற்பனையாகி வருகிறது.

லக்னோ
அயோத்தி செல்ல மக்களுக்கு மீண்டும் தடை

அயோத்தியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் திங்களன்று பிரதமர் மோடியால்  திறக்கப்பட்டது. திறப்பு விழா நாளில்  பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மோடியின் நிகழ்ச்சி நிரல் முடிந்த பின்பு செவ்வா யன்று முதல் ராமர் கோவில் செல்ல பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  பிரதமர் மோடி அயோத்தியை விட்டு சென்ற  வுடன் பாதுகாப்பு கட்டமைப்பை உத்தரப்  பிரதேச பாஜக அரசு வெகுவாக குறைத்தது.  

மேலும் முறையான திட்டமிடல் இல்  லாமல் பொதுமக்களை ஒரே பாதையில்  அனுமதித்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்  பட்டது. பொதுமக்கள் மேற்கொண்டு சிறிதுதூரம் நகர முடியாமல் கூட நெரி சலில் தவித்ததால், ராமர் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அயோத்தி காவல்துறை திடீரென அறிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு செவ்வாயன்று மட்  டுமா? மேலும் எத்தனை நாட்களுக்கு தடை என அயோத்தி காவல்துறை திடமாக  எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேங்டாங்
ஊழல் அரசாங்கம் என கூறியவர்களுடனேயே பாஜக கூட்டணி

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி யின் 2-ஆம் கட்ட யாத்திரை யான “இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்”  அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதி யில் இருந்து மேகாலயா மாநிலத்திற் குள் நுழைந்தது. மேகாலயாவின் நோங்  போவில் ராகுல் காந்தி பேசுகையில், “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை நாடு சந்தித்து வரும் நிலையில், மேகா லயா அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல்  நிறைந்த அரசு என உள்துறை அமைச்சர் அமித் ஷாவே கூறியிருந்தார்.

ஆனால் இங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதே ஊழல் அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் அமித் ஷா.  மேகாலயா தில்லியிலிருந்து ஆளப்  படுகிறது. மணிப்பூரில் நூற்றுக்கணக் கான விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து,  ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த மோதல் குறித்து பிரதமர் மோடி மெளனமாக இருப்பது மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும்.

மணிப்  பூர் பிரச்சனையைத் தீர்ப்பதில் பாஜக  தீவிரம் காட்டவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.  கடந்த 2023-ஆம் ஆண்டு மேகாலயா வில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  தேசிய மக்கள் கட்சி அதிக தொகுதிகளை வென்ற நிலையில், அந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி
அயோத்தியை தொடர்ந்து காசி, மதுராவிலும் பிரச்சனையை கிளப்ப பாஜக திட்டம்

ராமர் கோவிலுக்கு அடுத்தபடி யாக இந்து கோவில்களின் ஆக்  கிரமிப்பு என உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மசூதி மற்றும் மதுரா வில் உள்ள ஞானவாபி மசூதியை குறி வைக்கும் வேலையில் பாஜக இறங்கி யுள்ளது. இதுதொடர்பாக பாஜக மூத்த  தலைவர் சுப்பிரமணிய சாமி கூறுகை யில்,”ராமர் கோவிலைப் போல காசி யில் உள்ள விஸ்வநாதர் கோவில் மற்றும்  மதுரா கிருஷ்ணஜென்ம பூமி ஆகிய விவ காரங்களில் தானே முன்னின்று நீதி மன்றம் வாயிலாக போராடப்போகிறேன். ஏற்கனவே பொதுநல வழக்காக தாக்க லாகியுள்ள தனது மனுக்களை உடனடி யாக பட்டியலிட உச்சநீதிமன்றத்தை வலி யுறுத்தப் போகிறேன்” எனக் கூறியுள் ளார்.

மீண்டும் மோடி மீது பவுன்சர்
பிரதமர் மோடியை அடிக்கடி சீண்டி வரும் சுப்பிரமணிய சாமி சமீபத்தில் மனைவி  இல்லாத மோடி ராமர் கோவிலை திறக்க லாமா? என கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்து காசி, மதுரா விவகாரத்திலும் சீண்டியுள்ள சுப்பிரமணிய சாமி, “எதையும் செய்திராத மோடி, நான் கள மிறங்கியதும் உரிமை கோர மட்டும் வந்து விடுவார்” எனக் கூறியுள்ளார்.