தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் இருக்கை தொடர்பாக அடிக்கடி சண்டைகள் ஏற்படுவது வழக் கம். அதாவது உண வக இருக்கை களில் உட்காருவது மற்றும் இருக்கை சுத்தம் முதலியன வற்றில் அடிக்கடி வழக்கறிஞர்கள் இடையே வாக்கு வாதம் ஏற்படும்.
இந்நிலையில், செவ்வாயன்று உண வக இருக்கை சுத்தம் தொடர்பாக இரு வழக்கறிஞர்கள் குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், வழக்கறிஞர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மூத்த பெண் வழக்கறிஞரை மற்றொரு வழக்கறி ஞர் கன்னத்தில் அறைந்து தாக்கு தல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தால் தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் பர பரப்பான சூழல் ஏற்பட்டது.