india

img

மூடநம்பிக்கையின் கொடூரம்

தில்லியைச் சேர்ந்த பெண் ஒரு வர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்  கப்பட்ட தனது 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்.  ஹரித்வாரில் உள்ள கங்கை நீரில்  அமிழ்த்தி எடுத்தால் தனது குழந்  தைக்கு ரத்தப் புற்றுநோய் குணமா கும் எனக் கூறி நடுங்க வைக்கும் குளி ரில் 5 வயது குழந்தையை நீண்ட நேரம்  கங்கை நீரில் தனது குடும்பத்தினருடன் அமிழ்த்தி எடுத்தார்.

கங்கை நீரில் அமிழ்த்தி எடுக்கப்பட்ட 5 வயது குழந்தையை கரைக்கு தூக்கிக் கொண்டு வரப்படும் பொழுது மயக்க மடைந்து இருந்தது. 5 வயது குழந்தை யை குப்புறப் படுக்க வைத்தார் குழந்  தையின் தாயான இளம்பெண். விரட்டி அடித்தார் குழந்தை நடுங்கும் குளிரில் ஏன் இப்படிக் கிடக்கிறது? என அருகில் இருந்தவர்கள் குழந்தையை தூக்க முயன்றனர்.

ஆனால்  இளம்பெண், “எனது குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி” என கூறி  ஆவேசமாக சிரித்தார். மேலும் குழந் தையை தூக்க வந்தவர்களை தாக்க வந்தார். அருகில் இருந்தவர்களை விரட்டி அடித்தார். இதனால் யாரும்  அந்த பெண்ணிடம் இருந்து குழந்தை யை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் குழந்தை யை மீட்டு ஹரித்வார் மாவட்ட மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்த னர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தி னரை போலீசார் கைது செய்து விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்  நிலையில், கங்கை நீரில் மூழ்கடித் தால் நோய் குணமாகும் என்ற மூட நம்பிக்கையில் 5 வயது குழந்தையை பெற்ற தாய் மற்றும் உறவினரே மூழ்க டித்ததால் உயிர் பறி போன சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட 5 வயது குழந்தை தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. ஆனால் திடீரென குழந்தையின் குடும்பத்தினர் 226 கிமீ சாலை வழியாக டாக்சி பயணம் மேற் கொண்டு ஹரித்வாருக்கு வந்து, மூடநம்பிக்கையின் உச்சத்தால் கங்கை நீரில் மூழ்க வைத்து எடுத்  தால், குழந்தை ரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் எனக் கூறி கடும் குளிரில் கங்கை நதியில் அமிழ்த்தி எடுத்தனர்.