india

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

புதுதில்லி, மார்ச் 17- மக்களவை தேர்தலுடன் அரு ணாச்சலப்பிரதேசம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 19 அன்று அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநி லங்களுக்கு ஒரே கட்டமாகவும், ஆந்தி ராவிற்கு மே 13 அன்று ஒரே கட்டமாக வும், ஒடிஷா மாநிலத்திற்கு இரண்டு கட்டமாகவும் (மே 13, மே 20) தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் அருணாச்சலப்பிர தேசம், சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப் படுவதாகவும், ஜூன் 4-க்கு தேதிக்கு பதிலாக ஜூன் 2 அன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிறன்று அறிவித்தது.

2 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் ஜூன் 2 அன்றே முடிவடைவ தால் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.