india

img

அகமதாபாத்: ஏர் இந்தியா விமானம் விபத்து!

குஜராத்தில் ‘ஏர் இந்தியா’ விமானம் கீழே விழுந்து கோர விபத்து

முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார்

அகமதாபாத், ஜூன் 12 - குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் (230 பயணி கள், 2 விமானிகள், 10 பணியாளர்கள்) வியாழக் கிழமை (ஜூன் 11) அன்று பிற்பகல் 1:39 மணிக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனை நோக்கி “ஏர் இந்தியா - போயிங் 787-8 ட்ரீம்லைனர்” இரட்டை ஜெட் விமானம் கிளம்பியது.  அடுத்த 3 நிமிட இடைவெளியில் விமான நிலையத்திற்கு அருகே மேகானி நகர் குடி யிருப்புப் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவ விடுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்தது எரிந்தது. 9 மணிநேரம் பயணத்திற்கு ஏற்ப, விமா னத்தில் முழு கொள்ளளவில் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்ததால், கீழே விழுந்ததும் விமானம் வெடித்துச் சிதறியது. 50 பேர் சம்பவ இடத்திலேயே பலி விமானம் வெடித்துச் சிதறியதால் விபத்து நடந்த இடத்தில் வானளாவிய அளவிற்கு கரும்புகை எழுந்தது. தீயணைப்புப் படை யினர் மற்றும் தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அகமதாபாத் மருத்துவ மனையில் சேர்த்தனர். எனினும், இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 150-க்கும் மேற்பட் டோர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி 204 பேர் வரை பலியான தாக தகவல்கள் தெரிவித்தன. 20-க்கும் மேற் பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவ தாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

அடையாளம் காணமுடியவில்லை

விமானத்தில் இருந்த 230 பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்ற நிலையில், பிரிட்ட னைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுக்கலைச் சேர்ந்த  7 பேர் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் விமானத்தில் பயணித்துள்ளனர். ஆனால் உடல்  கருகிய நிலையிலும், தீக்காயங்களுடன் காணப்படுவதால் இறந்தவர்கள் அடையாளம் காணும் பணி சிக்கலுக்கு உள்ளாகியது.

விடுதியில் விழுந்த விமானம் :  5 மருத்துவ மாணவர்கள் பலி

குஜராத் மாநில மருத்துவ சங்க அறிக்கை களின் படி, ஏர் இந்தியா விமானம் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி ‘யுஜி விடுதி’ மற்றும் உணவகம் ஆகிய இரண்டு கட்டடங்களில் நேரடியாக மோதியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் விடுதியில் மாணவர்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ சங்கங் களின் கூட்டமைப்பு (FAIMA) கூறியுள்ளது. 50 மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள் என பலர் விமான விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகளும் வெளியாகின. தொடர்ந்து இரவு 7 மணியளவில் 5 மருத்துவ மாணவர்கள் வரை உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழப்பு

பாஜக மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதலமைச்சருமான விஜய் ரூபானி  (68) அகமதாபாத் விமான விபத்தில் சிக்கி  உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. லண்டனில் உள்ள தனது மகளை காண விபத்துக்குள்ளான ‘ஏர் இந்தியா’ விமானத்தில் விஜய் ரூபானி  பயணித்ததாக கூறப்படுகிறது.  

குடியரசுத் தலைவர்,  பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

அகமதாபாத் விமான விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிர்ச்சி  தெரிவித்துள்ளார். “குஜராத்தின் அகமதா பாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது” என அவர் கூறியுள்ளார். “அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து செய்தியை கேட்டு வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விபத்தில் சிக்கியவர்களுடன் என் மனது உள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். “அகமதாபாத் விமான விபத்து என்னுடைய மனதை வெகுவாக பாதித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உறவினர்களின் வலி கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அனைத்தும் அவர்களுடனேயே உள்ளது. அரசு நிர்வாகத்தின் மீட்பு மற்றும் உதவிகள் உடனடியாக தேவை. காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

எம்.ஏ. பேபி இரங்கல்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி விடுத்துள்ள செய்தியில், “அகமதாபாத்தில் நடந்த ‘ஏர் இந்தியா’ விமான விபத்து செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு என் இதயப்பூர்வமான அனுதாபங்கள். இந்த விபத்துக்கான முழுமையான விசாரணை, விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “பிரிட்டனை சார்ந்தவர்களை ஏற்றி வந்த விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு மனம் உடைந்தேன். விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன். இந்த துயரமான நேரத்தில் விமானத்தில் பயணித்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காகவும் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அகமதாபாத் விமான விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத் விமான விபத்து  அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர்  

242 பயணிகளுடன் ‘ஏர் இந்தியா AI 171’ விமானம் அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளானது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து கவலை கொள்வதாகவும், அனைத்து வழிகளிலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்புவதாகவும் முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தலா ரூ.1கோடி நிவாரணம்  விபத்தில் பலியானவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின்  கடைசி நிமிடங்கள்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து வியாழனன்று மதியம் 1:39 மணிக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் இரட்டை ஜெட் விமானம் கிளம்பியது. அடுத்த ஒரு நிமிடத்தில் விமானம் “டேக் ஆப்” ஆனது. விமானிகள் கடுமையாக முயற்சி செய்தும் விமானத்தை 500 முதல் 700 அடிக்கு மேல் மேலே எழுப்ப முடியவில்லை. இதனால் விமானிகள் 1:40 மணிக்கு விமான கட்டுப்பாடு மையத்திற்கு (ஏடிசி) “மே டே (MAY DAY)” அறிவிப்பை வெளியிட்டனர். எனினும் 1:41 மணிக்கு மேகானி மருத்துவ விடுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்தது.

மேடே என்றால் என்ன?

“மேடே (MAYDAY)” என்பது அவசரக் காலம் மற்றும் விமானம் விபத்தில் சிக்கும் போது விமான கேப்டன் “மேடே” அறிவிப்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு அளிப்பார். 3 முறை இந்த அழைப்பு விடுக்கப்படும். விமான கட்டுப்பாட்டு அறை விளக்கம் கேட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மற்றும் ஆலோச னைகளை வழங்கும். ஆனால்  அகமதா பாத்தில் விபத்தில் சிக்கிய விமானம் “மேடே” அழைப்புடன் விழுந்து நொறுங்கிவிட்டது.

விமான கேப்டன்  8,200 மணிநேர  அனுபவம் மிக்கவர்

விமான கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதன்மை அதிகாரி கிளைவ் தலைமையில் விமானம் இயங்கியது. கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணிநேர அனுபவமுள்ளவர் ஆவார். அதேபோன்று துணை விமானிக்கு 1,100 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளது. விமான கட்டுப்பாட்டு அறை அளித்த தகவலின் படி, ‘ஏர் இந்தியா’ விமானம் அகமதாபாத்தில் இருந்து 1:39 ஐஎஸ்டி (IST - 0809 UTC) மணிக்கு ஓடுபாதை 23இல் இருந்து புறப்பட்டது. அடுத்த ஒரு நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறைக்கு “மேடே (MAYDAY)” அழைப்பு விடுத்தது, ஆனால் அதன் பிறகு விமான கட்டுப்பாட்டு அறை செய்த அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்

விமான விபத்தின் பின்னணியில், அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு 011-24610843 | 9650391859 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

விரைவில் விசாரணை

அகமதாபாத் விமான நிலையம் அருகே நிகழ்ந்த ‘ஏர் இந்தியா’ விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரிக்கும் என்றும், ஏஏஐபி இயக்குநர் ஜெனரல் மற்றும் புலனாய்வு இயக்குநர் உள்ளிட்டோர் விரைவில் அகமதாபாத்திற்குப் புறப்படுவார்கள் என வியாழனன்று மாலை ஏஏஐபி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.