‘சங்கி’ என்பது கெட்டவார்த்தை இல்லையாம்! ‘சங்கி’ என்பது கெட்டவார்த்தை என யாரும் (தனது மகள் ஐஸ்வர்யா)கூறவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார். தான் இயக்கியிருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கடந்த ஜனவரி 26 அன்று பேசிய ஐஸ் வர்யா, “அப்பாவை (ரஜினியை) சமூக வலைதளங்களில் சங்கி, சங்கி என அழைப்பது தெரிந்தது.
அப்பாவை சங்கி எனச் சொல்லும்போது கோபம் வரும். ரஜினிகாந்த் ஒரு சங்கியாக இருந்தால், ‘லால் சலாம்’ போன்ற ஒரு படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த மாதிரியான படங்களில் நடிக்க முடியாது. ‘லால் சலாம்’ படத்தில் ரஜினியை தவிர மொய்தீன் பாய் வேடத்தில் அவ்வளவு தைரியமாக யாரும் நடித்திருக்க மாட்டார் கள். அதனால் சொல்கிறேன் ரஜினி காந்த் நிச்சயமாக சங்கி இல்லை” என உணர்ச்சிவசப்பட்டு கூறியிருந்தார். மகள் பேசுவதைக் கேட்டு ரஜினிகாந்தும் மேடை யிலேயே கண்கலங்கினார்.
ஐஸ்வர்யாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. ஐஸ் வர்யாவின் பேச்சுக்கு பரவலாக வர வேற்பு எழுந்த நிலையில், மறுபுறம் கோபம் வரும் அளவிற்கு, ‘சங்கி’ என் பது அவ்வளவு பெரிய கெட்டவார்த்தையா?” என்று சங்-பரிவாரங்கள் குதிக்க ஆரம் பித்தனர். “தங்கச்சி ஐஸ்வர்யாவுக்கு சொல்கிறேன். சங்கி என்பது இழி சொல் அல்ல. அதற்காக கோபப்படத் தேவை யில்லை. ரஜினிக்கு மோடியும், யோகியும் நண்பர்கள். அவர்கள் கூப்பிட்டால் செல் கிறார். இமயமலை செல்வது பிடிக்கிறது செல்கிறார்.
அதே சமயத்தில் துக்ளக் விழா வில் கலந்துகொள்கிறார், கலைஞர் விழா விற்கு கூப்பிட்டாலும் செல்கிறார்தானே. அவர் ஒரு கலைஞன். அவரை அப்படி தான் பார்க்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் களத்தில் குதித்தார். இந்நிலையில்தான், ரஜினிகாந்தும் தனது மகளின் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “சங்கி என்பது கெட்டவார்த்தை என்று யாரும் சொல்ல வில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, அவர் அனைத்து மதங்களையும் நேசிக்கும் போது, ஏன் அப்படி எல்லோரும் ‘சங்கி’ என கூறுகிறார்கள் என்றுதான் என் மகள் ஐஸ்வர்யா வேதனைப்பட்டார். அவர் சரி யாகவே பேசியுள்ளார்” என்று சமாளித் துள்ளார்.