“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களவை தேர்தலுக்கான 10 உத்தரவாதங்களை ஞாயிறன்று வெளி யான நிலையில், அக்கட்சியின் ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவாதங்களை வெளியிட்டார்.
அதில்
1. 24 மணி நேரமும் மின்விநியோகம்; மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்
2. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வி ; தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
3. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளிலும் மொஹல்லா மருத்துவ
மனைகள் உருவாக்கப்படும்.
4. ராணுவத்திற்கு சுதந்திரம் அளிக் கப்படும். ராணுவத்துக்கு போதிய நிதி வழங்கப்படும்
5. மோடி அரசால் தொடங்கப்பட்ட அக்னி வீரர்கள் திட்டத்தினை நிறுத்தி விட்டு, பணியில் சேர்ந்த அனைத்து வீரர்களும் நிரந்தர வேலையில் முறைப்படுத்தப்படுவர்.
6 விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக் கும்: எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் பயிர்களுக்கு உரிய விலை உறுதி செய்யப்படும்.
7. தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க வழி வகை செய்யப்படும்
8. நாட்டில் வேலையின்மையை போக்க ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும்
9. ஊழல் ஒழிப்பு உறுதி செய்யப் படும்; பாஜக தனக்கு சாதகமானவர்களைப் பாதுகாக்கும் போக் கினை உடைப்போம்.
10. உற்பத்தி துறையில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிதாக்கும் திட்டங்கள் உருவாக்கப் படும் - என உத்தரவாதங்கள் வெளியிடப்பட்டன.