india

img

7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

புதுதில்லி, ஜன. 1 - ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதி யில் 7.6 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானின் நானோ, இஷிகாவா விலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவி லுள்ள ஹோன்ஷூ தீவுப் பகுதியில், கடலுக்கடியில் 13 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 12.40  மணிக்கு அடுத்தடுத்து 7.2 ரிக்டர்  முதல் 7.6 ரிக்டர் வரை ஏற்பட்ட இந்த  நிலநடுக்கங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.  மேலும், அதுமட்டுமன்றி, 90 நிமி டங்களில் 4 ரிக்டருக்கும் அதிகமாக 21 முறை நிலநடுக்கம் நிகழ்ந்ததால், மக்கள் தங்களின் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமன்றி அவசர உதவிக்காக ராணுவத்தினரும் மீட்பு மற்றும் உத விப் பணிகளுக்காக களத்தில் இறங்கியுள்ளனர். 7.6 ரிக்டர் என்ற அளவிற்கான நில நடுக்கம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்ற அடிப்படையில் ஜப்பான் மற்றும் ஜப்பானை ஒட்டி யுள்ள தென் கொரியா, செர்பியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், 5 முதல் 7 மீட்டர் அளவு கடல் அலைகள் உயரலாம் என கூறப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும்  டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்  ளது.

ஜப்பானின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளதுடன், மக்கள் இந்தப் பகுதிகளி லிருந்து உடனடியாக வெளியேறு மாறு கேட்டுக் கொண்டுள்ளது. மிக உயரமான கட்டடங்களின் உச்சி க்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர் டோக்கியோவிலும், கான்டோ பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், சேதம் அல் லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளி யிடப்படவில்லை.

ஹோகுரிகு எலெக்ட்ரிக் பவர் நிறு வனம் (Hokuriku Electric Power) தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா என சோதித்து வருவதாக தெரி விக்கப்பட்ட நிலையில், ஜப்பானின் கன்சாய் அணுமின் நிலையம் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்த அசாதாரணமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.  

கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜப்பான் பகுதிகளில் இருக்கும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.  வலுவான பூகம்பம் மற்றும் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜப்பானில் வசிக்கும் இந்திய குடி மக்களுக்கு அங்குள்ள இந்தியத் தூத ரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதற்காக, +81-80-3930-1715 (Mr.Yakub Topno), +81-70-1492-0049 (Mr.Ajay  Sethi), +81-80-3214-4734 (Mr.D.N.Bar nwal), +81-80-6229-5382 (Mr.S.Bha ttacharya), +81-80-3214-4722 (Mr.Vivek Rathee) ஆகிய தொடர்பு எண் களையும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea. gov.in என்ற இணையதள முகவரி களையும் தூதரகம் வெளியிட்டுள் ளது. இதனிடையே, ரஷ்யா, வட கொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.