india

img

தமிழகத்தில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு  - இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் இதுவரை கொரோனாவால் 11640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை17,728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரேநாளில்  9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. 
இன்று 611பேர் குணமடைந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 9342 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.