india

2024: இந்திய எதிர்காலத்தின் போர்க்களம்

2023ஆம் ஆண்டு இஸ்ரேல் யுத்த  எந்திரம், காசாவில் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்திடும் கருப்பு நிழலின் பின்னணியுடன் முடிகிறது. டிசம்பர் 26 வரையிலுமான சுமார் மூன்று மாத காலத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக காசாவில் 20,915 பேர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள், இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தை களாவர். மேலும் 53,918 பேர் காயம் அடைந்திருக் கிறார்கள். இன்னும் கணக்கில் வராமல் எண்ணற்றோர், குண்டுகள் வீசித் தகர்க்கப்பட்ட கட்டிடங்களுக்குள்ளே, இடிபாடுகளுக்கிடையே உயிருடன் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்தை அமெரிக்கா முழுமையாக ஆதரித்து வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் ஆரம்பித்த அக்டோபர் 7இலிருந்தே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மிகவும் ஆபத்தான ஆயுதத் தளவாடங்களை அனுப்பி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் வந்த போது, தனக்கிருக்கும் ரத்து அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனை முடக்கியது.

இந்தியாவின் தலைகீழ் நிலைப்பாடு
இஸ்ரேலின் கொடுஞ்செயல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உறுதியான முறையில் ஆதரவு அளித்துவருவது என்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை; அதே சமயத்தில், புதிய அம்சம் என்னவெனில், இதுநாள் வரையிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குத் தங்களுடைய முழுமையான ஆதரவினை அளித்து பெரிய அளவில் மாறியிருப்பதாகும். ஐ.நா.பொது மன்றத்தில் அக்டோபர் மாதம், போர் நிறுத்தம் வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்க்கக்கூடிய அளவிற்கு இந்தியா சென்றது. அதன்பின்னர் ஐ.நா.பொது மன்றத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து இரண்டாவது முறை  வாக்கெடுப்பு நடைபெற்றபோது இந்தியா முகத்தைச் சுழித்துக் கொண்டு வாக்களித்தது. இரண்டாம் முறையும் ஒருவேளை இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால், ஆசிய நாடுகளில் மற்ற நாடுகள்  அனைத்தும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்த நிலையில் இந்தியா தனிமைப்பட்டிருக்கும்.

146 எம்.பி.,க்கள் இடைநீக்கம்

2023, மோடி அரசாங்கம் இரண்டாவது முறை  அமைக்கப்பட்டதன் இறுதி ஆண்டாகும். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தொடங்கப்பட்ட கடந்த ஓராண்டு காலமாகவே, இந்தியாவில் ஜனநா யகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கான சுவர்கள் மூடப்படத் தொடங்கி விட்டன. நாடாளுமன்றம், புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது, அதன் புதிய இழிவான நிலையை அடையாளப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசாங்கத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் விதத்தில், இந்த ஆண்டின் நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதச்சார்பற்ற அரசா?

இந்திய அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல, மாறாக ‘இந்துத்துவா மதவெறி அரசு’  என்பதை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நீதித்துறையின் அனுசரணை யுடன், காசி மற்றும் மதுராவில் உள்ள மத ஸ்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. வருகிற புத்தாண்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேகம், அரசின் ஆதரவுடன் நடக்க இருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில், சிறுபான்மை யினர் இரண்டாம்தர மக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் இறைச்சி வியாபாரத்தில் அவ்வப்போது தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. பசுக்களைக் கடத்திச் சென்றதாகவும், மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகவும் அவ்வப்போது குற்றம்சாட்டப்பட்டு, தாக்குதல்களுக்கும், கொலை செய்யப்படுவதற்கும் ஆளாகின்றனர். புல்டோசர், முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலின் அடை யாளமாக மாறி இருக்கிறது.

மணிப்பூர் பயங்கரம்
மணிப்பூரில், 2023 மே மாதத்திலிருந்தே மிகவும் மோசமான இன மோதல்கள் நடந்ததைப் பார்த்தோம். ஏழு மாதங்கள் கடந்த பின்னரும் மெய்த்திகளுக்கும், குக்கிகளுக்கும் இடையே யான இனப் பிளவு தொடர்கிறது. பள்ளத்தாக்கு களுக்கும், மலைப் பகுதிகளுக்கும் இடையே பாது காப்புப் படையினர் தொடர்ந்து நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றனர். மணிப்பூரை ஆளும் பாஜக-வின் முதலமைச்சரே அம்மாநிலத்தில் பழங்குடியினருக்கும் அல்லாதவர்களுக்கும் இடையே பாகுபாட்டினை ஏற்படுத்தியதற்குப் பிரதானமான காரணமாவார். அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் மூலமாக ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு ஒன்றிய அரசாங்கம் தவறிவிட்டது.  பாஜக ஆட்சியாளர்களின் பெரும்பான்மைவாத மதவெறி அரசியல் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பேரழிவினை ஏற்படுத்தும் என்பதற்கு, கூருணர்வு மிக்க மணிப்பூர் பிராந்திய மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கும் மோசமான விளைவுகளே சாட்சியமாகும்.

ஜம்மு-காஷ்மீர் உரிமை பறிப்பு
2023இல் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள், அங்கேயுள்ள எதிர்க்கட்சி அரசாங்கங்களின் விவகாரங்களின் மீது மிகவும் மோசமான முறையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திடாமல் அம் மாநில சட்டமன்றங்களின் உரிமைகளை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது தொடர்பாகவும், 3-ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஒன்றிய அரசாங்கம் கூட்டாட்சித் தத்துவத்தினை மீறி மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தின் மீதும் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது டன், ஒன்றிய அரசின் செயல்கள் சரி என்று கூறி அவற்றின்மீது நீதிமன்றத்தின் முத்திரையையும் குத்தியிருக்கிறது.

உச்சபட்ச வேலையின்மை
மோடி அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விவரங்களைக் காட்டி, இந்தியா உலகத்திலேயே மிக வேக மாக வளர்ந்துவரும் பொருளாதார நாடு என்று  பீற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வரு மானத்தைப் பொறுத்தவரை, 2023இல் தனிநபர் வருமானம் 2600 டாலர்கள் என்ற நிலையில் ஜி.20 நாடுகளின் மத்தியில் இந்தியா மிகவும் கீழ் நிலையில் இருந்துவருகிறது. மேலும், வளர்ச்சி குறித்து என்னதான் தம்பட்டம் அடித்தாலும் அது வேலைவாய்ப்பினை அதிகரித்திடவில்லை. சமீபத்திய இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் தரவின்படி, வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு அக்டோ பரில் 10.05ஆக இருந்தது. இது கடந்த 21 மாதங் களில் உச்சபட்ச அளவாகும். இளைஞர்களின் வேலையின்மையோ 23.22 விழுக்காடாகும்.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகள், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை, தொடர்ந்து உயர்ந்து, ஏழை மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. உண்மை ஊதியம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருப்பதன் விளைவாக, ஏறும் விலைவாசியும், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமும்,   உலக பசி-பட்டினி அட்டவணைக் குறியீட்டில் (global hunger index) உலகில் உள்ள 125 நாடுகளில் 111ஆவது இடத்திற்கு இந்தியாவின் தர வரிசையைத் தள்ளியிருக்கிறது.

கார்ப்பரேட் - மதவெறியர் கூட்டணி
2023இல் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர் களின் கூட்டு முக்கியமான இடத்தைப் பெற்றிருக் கிறது. குறிப்பாக அதானி குழுமத்தின் கார்ப்பரேட் மோசடிகளை, பங்குச்சந்தை வணிகத்தின் அதன் தில்லுமுல்லுகளை, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறு வனம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது; அதன் மூலம் அது சர்வதேச செய்தியாக மாறியிருந்தது. ஆனாலும், மோடி அரசாங்கம், கவுதம் அதானி யின் பின்னே வலுவாக முட்டுக் கொடுத்து அவரைப் பாதுகாத்தது. அவரது நிறுவனம் மேற்கொண்ட மோசடிகளை விசாரிப்பதற்கு, பிடிவாதமாக மறுத்து நின்று, தன்னுடைய கூட்டுக் களவாணிக்கு சாதக மாகச் செயல்பட்டது. அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தியதை, இந்துத்வா ஆட்சியாளர் கள் இந்தியா மீதான தாக்குதலாகவே பார்த்தனர். 

மேலும் மேலும் செல்வக் குவிப்பு
மோடி அரசாங்கம், பெரு முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதன் காரணமாக, மக்கள்  மத்தியிலான ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றி ருக்கின்றன. 2023 ஜனவரியில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, நாட்டில் உச்சத்தில் உள்ள 1 விழுக்காடு பணக்காரர்கள், நாட்டின் செல்வத்தில் 40 விழுக்காட்டிற்கும் அதிக மான அளவிற்குப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில், மக்கள் தொகையில் அடிமட்டத் தில் இருப்பவர்களில் பாதிப்பேர், நாட்டின் செல்வத்தில் வெறும் 3 விழுக்காடு அளவிற்கே தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு குறி
2023ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளைக் குறி வைத்துத் தாக்குவதற்கு ஒன்றிய அரசாங்கத் தின் கீழ் இயங்கிடும் புலனாய்வு முகமைகள் மிகவும் விரிவான அளவில் பயன்படுத்தப்பட்டதையும் பார்த்தோம். அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றின் மூலம் சோதனைகளும், கைதுகளும் ஆளும் பாஜக அரசாங்கத்தின் கைகளில் மிகவும் இழிவான ஆயு தங்களாக (cynical weapons) ஆயுதங்களாக மாறி இருக்கின்றன.

2023-ஆம் ஆண்டின் இறுதியில் நடை பெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொட ரின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் இல்லாமல், மூன்று புதிய கிரிமினல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. காலனித்துவத்தின் பாரம்பரியத்தை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உண்மை யில், இது மறுகாலனித்துவ வடிவமேயாகும். புதிய கிரிமினல் சட்டங்களின் பல ஷரத்துக்கள், மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அடிப்படைப் பாது காப்பு அம்சங்களை ஒழித்துக் கட்டியிருக்கிறது. ஒரு போலீஸ் அரசாங்கத்தை உருவாக்கும் (police state) விதத்தில் இவை அமைந்துள்ளன.

வீறுகொண்டு எழுந்த போராட்டங்கள்
தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகள்; விவ சாயத் தொழிலாளர்களும் மதவெறியர்கள்-கார்ப்பரேட்டுகளின் ஆட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் முதன்முதலாக, தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாய இயக்கங் களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியத் தொழிற் சங்கங்களும், சம்யுக்த கிசான் மோர்ச்சா வும் இணைந்து செப்டம்பரில் ஒரு சிறப்பு  மாநாட்டை நடத்தி, நவம்பரில் மூன்று நாள்  மாபெரும் முற்றுகைப் (mahapadav) போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்தன. இதனையொட்டி, நாட்டின் பல பகுதிகளில் தொழிலாளர்களும், விவ சாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த ஆண்டானது, பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக உழை க்கும் மக்களில் பல பிரிவினர் அணிதிரண்டு போரா டியதைப் பார்த்தது.   

2023இன் நிறைவில் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ (‘INDIA’) என்னும் அணி சேர்க்கையை உருவாக்கியுள்ளன. இதன் குறிக் கோள், 2024 ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட கூட்டணியை ஏற்படுத்தி, பாஜக-வை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றுவது என்பதாகும். இது, அரசமைப்புச்சட்டத்தின் அனைத்து அடிப் படை அம்சங்களாகவும் விளங்கும், ஜனநாய கத்தை, மதச்சார்பின்மையை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமாக அமைந்திடும்.

2024 புத்தாண்டு, இந்தியாவின் எதிர்காலத் தைத் தீர்மானித்திடக்கூடிய விதத்தில் மாபெரும் போர்க்களத்தைப் பார்த்திட இருக்கிறது.

- தமிழில்:ச.வீரமணி