ஜம்மு-காஷ்மீரில் 2024 ஜனவரியில் தொடங்கி கடந்த ஜூன் வரையிலான 6 மாதங்களில் மட்டும் 2,864 விபத்துகள் நடந்துள் ளது. இந்த விபத்துகளில் சிக்கி 417 பேர் உயிரி ழந்ததாகவும், 3,894 பேர் படுகாயமடைந்ததாகவும் அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரில் 2024 ஜனவரியில் தொடங்கி கடந்த ஜூன் வரையிலான 6 மாதங்களில் மட்டும் 2,864 விபத்துகள் நடந்துள் ளது. இந்த விபத்துகளில் சிக்கி 417 பேர் உயிரி ழந்ததாகவும், 3,894 பேர் படுகாயமடைந்ததாகவும் அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் அமீபா மூளைக் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நீர் நிலைகளில் குளித்த 4 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது.
“விஐபி தரிசனத்திற்கு தெலுங்கானாவின் மக்கள் பிரதிநிதிகள் (எம்எல்ஏ, எம்பி) தரும் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படு வதில்லை. ஆந்திராவின் மக்கள் பிரதிநிதிகள் தரும் பரிந்துரை கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும்” என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் கணிக்க முடியாத அளவிற்கு கனமழை பெய்து வரும் நிலை யில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ராய்ப்பூரை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்
வயநாட்டுக்கு உதவ உண்டியலுடன் முதல்வரை சந்தித்த குழந்தைகள்
வயநாட்டிற்கான கேரள முதல்வ ரின் நிவாரண நிதிக்கான உத விகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், விழிஞ் ஞம் பகுதியைச் சேர்ந்த குழந்தை கள் தங்களது உண் டியல் சேமிப்புடன் முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க வந்தனர்.
விழிஞ்ஞம் துறைமுகம் பகுதி எல்.பி.பள்ளி மாணவர்கள் குழுவினர் ஆசிரியர்களுடன் வந்து முதல்வர் பினராயி விஜயனிடம் நேரடியாக பணத்தை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த குழந்தைகளின் அக்கறையும் அன்பும் பாராட்டத்தக்கது என்று முதல்வர் கூறி னார். தங்களுடைய சேமிப்பை கொடுத்து நாட்டுக்காக கைகோர்த்த குழந்தைக ளுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், இந்த அக்கறையும் அன்பும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்கள் சேமித்த 75,000 ரூபாய் வயநாட்டுக்கு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எச்.டி.பைஜூ, பி.டி.ஏ தலைவர் அன்வர் ஷான் மற்றும் ஊழியர்களுடன் மாணவர் கள் முதல்வரை சந்தித்தனர்.
ஐஸ்வால்
ஆப்பிரிக்க வைரஸ் எதிரொலி
மிசோரமில் 16,158 பன்றிகள் உயிரிழப்பு
பன்றிகளை குறிவைத்து தாக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் (African swine fever virus) உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான மிசோரமில் மிக மோசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 200 கிராமங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், கடந்த 7 மாதங்களில் மாநிலம் முழுவ தும் 16,158 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக மிசோரம் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. 16,158 பன்றிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நோய் தாக்கும் முன்னரே கொல்லப்பட்டன என தகவல் வெளி யாகியுள்ளது.
புதுதில்லி
இடதுசாரிகளுக்கு
எதிராக திரிணாமுல் எம்.பி., சர்ச்சை பேச்சு
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று மக்களவையின் கேள்வி நேரத்தின் பொழுது திரிணா முல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய்,”இடதுசாரி தீவிரவாதத்தை சமாளிப்பதில் மேற்கு வங்க அரசு வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க அரசின் மாதிரியை ஒன்றிய அரசு ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களிலும் முயற்சி செய்யுமா?” என கேள்வி கேட்டார்.
இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”சிறப்பாகச் செயல் படும் மாநிலங்களின் மாதிரிகளை செயல் படுத்துவதில் ஒன்றிய அரசுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் எந்த மாநிலமும் மேற்கு வங்க மாதிரியை செயல்படுத்த விரும்பாது என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.
வயநாடு
பணமில்லாமல் வாங்கலாம்
சூரல்மலைக்கு அருகே அன்புக் கடை திறந்த இஸ்லாமியர்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல் மலை, முண்டக்கை பகுதி மக்க ளுக்காக நீலிகாப்பில் அன்புக் கடை யை திறந்துள்ளார் சங்கரத் உஸ்மான் என்ற இஸ்லாமி யர். நீலிகாப் சூரல் மலைக்கு அருகில் உள்ள கிராமம் ஆகும். இங்குள்ள பெரும்பாலா னோர் வேலையை விட்டு விட்டு நிலச் சரிவு மீட்புப் பணி யில் ஈடுபட்டுள்ள னர். அதனால் பணம் இல்லாமல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அன்புக் கடையை திறந்துள்ளார் சங்க ரத் உஸ்மான். இதுகுறித்து செய்தியா ளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “எனது கடையில் உள்ளூர் மற்றும் பாதிக் கப்பட்ட மக்கள் பணம் செலுத்தாமலே இங்கிருந்து மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம். வேலையை விட்டு விட்டு நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர். வழக்கமாக வருபவர்க ளில் பலர் இப்போது உயிருடன் இல்லை. தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களு க்கு உதவி தேவைப்படும் நேரம் இது” என சங்கரத் உஸ்மான் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் சங்கரத் மார்ட்டில் இருந்து 50,000 ரூபாய் மதிப்புள்ள பொ ருட்களை உள்ளூர்வாசிகள் இலவச மாக வாங்கிச் சென்றுள்ளனர்.