india

img

புல்புல் புயலால் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

புல்புல் புயலால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாக மையம் கொண்டிருந்த புல்புல் புயல், மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. இந்நிலையில், புல்புல் புயலால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மேற்குவங்கத்தில் மட்டும் 7 பேரும், ஒடிசாவில் 2 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

புயல் மழை காரணமாக 60,000 மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 4,65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 78,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களுக்காக 471 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல், வங்கதேசத்தில் 5,000 முகாம்கள் அமைக்கப்பட்டு 14 லட்சம் பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

;