இராமேஸ்வரம், பிப்.8- எல்லை தாண்டி மீன்பிடித் தாகக் கூறி இராமேஸ் வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களது இரண்டு படகு களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள்; இரண்டு படகு கள் பறிமுதல் செய்யப்பட்டன. இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 482 இயந்திரப் படகுகள் புதன் கிழமை கடலுக்குச் சென்றன.
இதில் அலெக்ஸ், அன்டன் சசிக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகு களில் சென்ற மீனவர்கள் நெடுந் தீவு அருகே இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தாகக் கூறி இராமேஸ் வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர். படகுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 19 மீனவர்களையும் மேல் விசா ரணைக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தங்கச்சிமடம். இராமேஸ்வரம் மீனவர்கள்: ஜான்சன் (38), மேட்டன் (36), ஆண்டனி (25), எஸ்.முனியசாமி (36), கே முனியசாமி (48), சேகர் (45), ஜேசுராஜா (38), குளோவர்சன் (26), பிரசாந்த் (32), செல்வ தாமஸ் (48), செல்வராஜ் (46), ஆண்டனி சசிகுமார் (43), ஆஸ்வால்ட் (36), பிராங்க்ளின் (36), எஸ் முனியசாமி (32), ஆரோக்கியம் (50), சீனி மாலிக் (33), தனீஸ்வர் மாலிக் (49). கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் கைது செய்யப் பட்ட மறுநாள் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் புறக் கணித்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக அரசி யல் கட்சிகள் கண்டனம் தெரி வித்ததோடு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய அர சுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து மீனவர் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறைபிடிக்கப் பட்ட எங்களின் 150 படகு களை மீட்பதற்கு ஒன்றிய அரசின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதால் அவர்களது குடும்பங்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கி யுள்ளன. பாக். நீரிணைப் பகுதி யில் மீன்பிடிப்பது ஆபத்தான தாக மாறியுள்ளது இலங்கை கடற்படையின் நடவடிக்கை யால் தமிழக மீனவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள னர்” என்றார் மீன்வளத்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி அன்னியச் செலாவணி கிடைக் கிறது. இதில் பெரும் பகுதி இராமநாதபுரம் கடலோர மாவட்டத்தைச் சார்ந்தே உள்ளது.
ஆனால். மீனவர்கள் வாழ்வோ பாதுகாப்பற்றதாகி விட்டது. மீனவர் சமூகத்திற்கு மரி யாதை அளிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி அச்சுறுத்தல் இன்றி தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றார். கடந்த இருபது ஆண்டு களில் 6,658 தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளால் 2008ல் -1,456 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:
ஆண்டு கைது விடுதலை
2009 127 127
2010 26 26
2011 198 198
2012 197 197
2013 676 403
2014 787 1045
2015 454 375
2016 290 333
2017 453 420
2018 156 230
2019 210 205
2020 74 49
2021 159 131
2022 268 320
2023 240 243
2024 46 34