கிருஷ்ணகிரி, மார்ச் 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தேர்தல் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க கூட்டம் ஓசூரில் சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற் றது.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய, வட்டக் குழுக்கள் சார்பில் வீடு தோறும் வசூ லித்த தேர்தல் நிதியான 17 லட்சம் ரூபாய் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
முன்னதாக மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒன்றியச் செயலா ளர் ராஜா ரெட்டி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,செயற்குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் இருதயராஜ், கோவிந்த சாமி, சாம் ராஜ்,மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ் உள்பட பலர் இதில் கலந்துகொண்ட னர்.
மாவட்டக் குழு உறுப்பினர் நாரா யண மூர்த்தி நன்றி கூறினார்.