இந்தியாவில் ஓராண்டில் மட்டும் 124 முறை நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளை விடவும் அதிகளவில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”2023-ஆம் ஆண்டில் நவம்பர் வரையில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை யிலான நிலநடுக்கங்கள் 97 முறையும், 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங் கள் 21 முறையும், 5.0 முதல் 5.9 வரை நிலநடுக்கங்கள் 4 முறையும், 6.0 முதல் 6.9 வரையில் நிலநடுக்கங்கள் 2 முறை என மொத்தம் 124 முறை இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தேசிய நில அதிர்வு மையத்தின் பதிவு தகவலை குறிப்பிட்டார்.