india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சண்டிகரை சேர்ந்த வயதான தம்பதியினருக்கு கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.

திங்களன்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் போத்கயா ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மோடி ஆட்சியில் பாஜக  எம்எல்ஏக்கள்  ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்படு வது இதுவே முதல் முறையாகும். 

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கி ணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் திங்க ளன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் செல்லவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 561  கைதிகள் மரண தண்டனைக்கு அனுப்பப்பட்டதாக புதிய ஆய்வறிக்கை (திட்டம் 39 ஏ) ஒன்று வெளி யாகியுள்ளது.

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீரரான தினேஷ் சந்திரா (30) ரயிலின் கோச்சில் இருந்து வெளியேறும் போது தவறுதலாக தன்னுடைய துப்பாக்கியை அழுத்தியதில் குண்டு பாய்ந்து சம்  பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்ப வத்தில் பயணி ஒருவரும் துப்பாக்கி சூட்டில் படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்  கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5  ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் திரிணா முல் காங்கிரஸ் வேட்பாளராக பத்திரி கையாளர் சாகரிகா கோஷ் அறிவிக்கப்பட்டுள் ளார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பி னர்களாக உள்ள சுஷ்மிதா தேவ், நதிமுல் ஹக்  ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் செயல்பட்டு வரும் அமெ ரிக்க துணை தூதரகத்திற்கு கடந்த பிப். 9-ஆம் தேதி  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் மும்பை போலீசார் விசா ரணையை தொடங்கியுள்ளனர்.