தேசியக் குற்ற ஆவணக் காப் பகம் (என்சிஆர்பி) தற் கொலை தொடர்பான ஆய் வறிக்கையை திங்களன்று வெளி யிட்டது. இந்த ஆய்வறிக்கையில், “நாடுமுழுவதும் கடந்த 2022-ஆம் ஆண்டில் 1,70,924 தற்கொலை சம்ப வங்கள் அரங்கேறியுள்ளன. முக்கி யமாக கடந்த 2021-ஆம் ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் தற்கொலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. தற் கொலை விகிதத்தில் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களின் தற்கொலை மூன்றில் ஒரு பங்காக உள்ளது. விவசாயிகளின் தற் கொலை 6.6 சதவீதமாகவும், தினக் கூலி தொழிலாளர்களின் தற்கொலை 26.4 சதவீதமாகவும், குடும்ப பெண் களின் தற்கொலை 14.8 சதவீதமாக வும் உள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
11,290 விவசாயிகள்
விவசாயிகள் தற்கொலை தொடர்பான என்சிஆர்பி அறிக்கை யில்,”கடந்த 2022இல் நாடுமுழு வதும் 11,290 விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். 11,290 பேரில் 53 சதவீதம் (6,083) பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். கடந்த 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022இல் விவசாயி கள் தற்கொலை 3.7 சதவீதம் அதிக மாகியுள்ளது. 2021இல் 10,281 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
45,185 தினசரி கூலித்தொழிலாளர்கள்
2022இல் 45,185 தினசரி கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய் துள்ளதாக என்சிஆர்பி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பெண்களை விட ஆண் தொழிலா ளர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கர்நாடகா, ஆந் திரா, தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தின சரி கூலித் தொழிலாளர்களின் தற் கொலை அதிகமாக அரங்கேறி யுள்ளது. இறந்தவர்களில் பெரும் பாலானோர் தூக்கிட்டு, விஷம ருந்தி இறந்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி, வாகனங்கள் அல்லது ரயில் கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தினசரி 150 பேர்
2022இல் நாட்டில் தினசரி 154 விவசாயிகள் மற்றும் கூலித்தொழி லாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2021இல் விவசாயிகள், கூலித்தொழிலாளர் களின் தினசரி தற்கொலை 144 ஆக இருந்த நிலையில், வழக்கம் போல 2022இல் மகாராஷ்டிராவில் விவசாயிகள் - கூலித் தொழிலாளி களின் தற்கொலைகள் அதிகம் அரங்கேறியுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றம் தில்லி முதலிடம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தில்லி முதலிடம் பிடித்துள்ளது. சமீப கால மாக தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டை விட 2022இல் கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் என பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 1.25 சதவீதம் அதிகரித்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக 116 கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், 3,909 பெண் கள் கடத்தப்பட்டுள்ளனர். தில்லியில் கடந்த 2022இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 14,158 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில் 1,204 பலாத்கார வழக்குகளும், 129 வரதட்சணை மரணங்களும், 5,585 கடத்தல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
தில்லிக்கு அடுத்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த இடத்தில் உள்ளன. மும்பை யில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 6,176 ஆகவும், பெங்களூ ரில் 3,924 ஆகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.