india

img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 955 பேர் உயிரிழப்பு

இந்நியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில், மாநிலங்களின் ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,05,45,433 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 955 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 52,299 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,58,078 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,350 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 306 ஆக உள்ளது எனவும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

;