india

img

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்

புதுதில்லி:
மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் இந்தியமொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்)அமைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தி மற்றும்ஆங்கில மொழி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) என்றுஇந்தியில் பெயர் மாற்றி, மத்திய பல்கலைக்கழகமாக மாற்றவும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாதது இதற்கு சாதகமாக உள்ளது.தமிழுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பிபிவி உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.செம்மொழிகளை புதிய மத்திய பல் கலைக்கழகமான பிபிவி உடன்இணைப்பதுஉள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது.இக்குழுவுக்கு தமிழரான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமை ஏற்றுள்ளார். அடுத்த 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு இவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு
இதுகுறித்து என்.கோபாலசாமி கூறுகையில், தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல் நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையுடன் இணைக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

;