புதுதில்லி, டிச. 5 - பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2 ஆயிரத்து 623 பெருமுதலாளிகள் சுமார் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 049 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் உள்ளதாக மோடி அரசு தெரிவித்துள்ளது.
இதனை சமரசத் தீர்வு மையங்கள் மூலம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் மழுப்பலாக பதிலளித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கன்று தொடங்கிய நிலை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன், “பெற்ற கடனை வேண்டு மென்றே திருப்பி செலுத்த தவறு பவர்கள் (Wilful Defaulters) மீது அர சாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?” என்று கேட்டிருந்தார்.
அவ்வாறு திருப்பிச் செலுத்தாத நபர்கள் மற்றும் அவ ர்கள் பாக்கி வைத்து ள்ள தொகை எவ்வளவு? என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை யமைச்சர் டாக்டர் பக வத் கராட்எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
“இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அதிக காலதாமதம் அல்லாத, திருப்பி செலு த்தத் தவறிய கடன் தொகையை, வங்கிகள் மீண்டும் வசூலிப்பதற்கு ஏது வாக சமரசத் தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சமரசத் தீர்வானது, ஒரு சரியான முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஒட்டுமொத்த வெளிப் பாட்டு தொகை கொண்ட எல்லா கட னாளிகளின் குறிப்பிட்ட கடன் தகவல் களை, மத்திய பெரிய கடன் பற்றிய தக வல் களஞ்சியத்திற்கு (Central Repository of Information on Large Credits - CRILC) பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் அறி வித்துள்ளன. 31-03-2024 அன்று மேற்படி களஞ்சியத்தின்படி 2623 தனித்துவ மான கடனாளிகளை, ‘வேண்டு மென்றே திருப்பிச் செலுத்தத் தவறு பவர்கள்’ (‘Wilful Defaulters’) என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் பட்டியலிடப்பட்ட வங்கிகளிட த்தில் வைத்துள்ள ஒட்டுமொத்த நிலு வை கடன் ரூ. 1 லட்சத்து 96 ஆயி ரத்து 049 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது.” இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)