india

முந்தைய அயோத்தி இல்லை!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜேசிபி, கிரேன்களின் இடை விடாத உறுமல், சுமை தூக்கும் லிப்டுகள், சுத்தியல் சத்தங்களும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டி ருந்தன.

ராமஜென்மபூமி பாதை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக, பல கடைகள், வீடுகள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மிக அற்பமான தொகையே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. சொந்த நிலத்தில், கடைகள் வைத்திருந்த பலரின் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு 30 கி. மீ.க்கு அப்பால் வெறும் 6X6 அடி நிலம் மட்டுமே தந்து பலரையும் வெளியேற்றியுள்ளனர்.

பல கடைக்காரர்களும் நாடு கடத்திவிட்டது போல அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.  அயோத்தி வளர்ச்சி அடைந்துவிட்டதாம்! கடையின் நிலச் சொந்தக்காரர்கள் சகட்டுமேனிக்கு வாடகையை உயர்த்தி விட்டார்கள். அந்த ராமன் திருப்தியாக இருக்கிறாரோ இல்லையோ எந்த சில்லரை வணிகரும் திருப்தியாக இல்லை.

அமைதியும் அழகையும் இழந்து... 
அயோத்தியில் வால்மீகி விமான நிலையம் அமைக்கப்பட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலங்க ளை இழந்த விவசாயிகளுக்கு உரிய வாறு விவசாய நிலங்கள் அளிக்கப்பட வில்லை, ஏமாற்றப்பட்டனர்.

அயோத்தி கம்பீரமாக மாறி இருக்க லாம்! முந்தைய அமைதியையும், அழகை யும் அயோத்தி இழந்து விட்டதாக அயோத்தி வாசிகள் வருத்தப்படுகின்றனர். இன்று வணிகமே முன்னுக்கு வந்து விட்டதாக  கூறுகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த அயோத்திவாசிகள் இனியும் அங்கு வாழ முடியாது. அயோத்தி இனி பக்தர்களின் நகர மாக இருக்காது. வியாபாரிகளின் நகரமாக  இருக்கும். அயோத்தியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கோவில்கள் கவ னிப்பாரற்று இடியும் நிலையில் உள்ளன. அந்த பழமையான கோவில்களின் பாரம் பரியம் பாதுகாக்கப்படப் போவதில்லை. இனி மோடி திறந்து வைத்த ஒரே ஒரு ராமர் கோவில் மட்டுமே இருக்கும்.

பாபர் மசூதி இடிப்பின் போது கொல்லப்பட்டவர்களுக்கு நீதியில்லை
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 31 ஆண்டு கள் கழித்து முஸ்லிம்கள் அதே இடத்தில்  கட்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவை எதிர் கொள்கின்றனர். அவர்களின் வேண்டு தல் எல்லாம் தாங்கள் அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான். முகமது சாஹித் என்பவரின் தாத்தா அப்துல் கபர்கான் தான் பாபர் மசூதியின் கடைசி இமாமாக இருந்தவர். நல்ல வேளை! அவர் பாபர் மசூதி இடிக்கப்படு வதை பார்க்காமலேயே 1990லேயே இறந்து விட்டார்.

ஆனால், 1992 இல்  ஆர் எஸ்எஸ் பாஜக வன்முறைக் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, சாஹித் தின் அப்பா மற்றும் மாமாவுடன் 17 பேர்  குத்திக் கொலை செய்யப்பட்டனர். உயி ரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். சாஹித்தின் அப்பா மர அறுவை மில் தீக்கிரையாக்கப்பட்டது. திருமணம் நிச்சயமான தங்கையின் திருமண ஆடை கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சாஹித் பிழைப்புக்காக ஆட்டோ ரிக்சா ஓட்டினார். தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சகோதரர்கள் வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். அவரது மகள்கள் மருத்துவம் படிக்க இருப்பதாக தெரிவித்தார். எப்படியோ, சாஹித் துயரத்தைக் கடந்துவிட்டார்.

அவர் வேண்டுவதெல்லாம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே நேரத்தில், மசூதியும் கட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டது. ஆனால், 25 கிலோ மீட்டர் தாண்டி வழங்கப்பட்ட மசூதிக்கான ஐந்து ஏக்கர் நிலம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 1992 பாபர் மசூதி இடிப்பின் போது வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட வர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்பட வில்லை என்பதே சாஹித்தின் ஆதங்க மாக இருக்கிறது.

1992 வன்முறை கொடுங்கனவு தொ டர்ந்து வந்து துரத்தவே, ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு அயோத்தியில் வாழும் பல முஸ்லிம் குடும்பங்கள் தற்காலிகமாக வீட்டைக் காலி செய்து விட்டு வெளியில் சென்று விட்டனர். பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக வழங் கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலம் போதாது; அது இந்தியாவிலேயே பெரிய மசூதியாக வும், நூலகம், மருத்துவக் கல்லூரி, புற்று நோய் மருத்துவமனை பல்வேறு வசதிகளு டன் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.  

கூடுதலாக ஆறு ஏக்கர் நில வழங்க யோகி அரசிடம் வேண்டுகோள் விடப் பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அயோத்தி எங்கும் வளர்ச்சித் திட்டங்கள்.  மசூதி கட்ட வழங்கப்பட்ட இடத்திலோ அந்த பகுதிகளிலோ ஒன்றும் நடக்கவில்லை.

ராமன் என்ன நிறம்? கருப்பா, சிவப்பா, நீலமா, பச்சையா, சாம்பல் நிறம் கலந்த நீல நிறமா?
வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டத் தில், சீதை அனுமனிடம் ராமனைப் பற்றி  என்ன தெரியும் என்று கேட்கிறாள். ராமனின் தோற்றத்தை அனுமன் விவரிக்கும் போது ராமனின் நிறம் கருப்பு  என்கிறான். பல்வேறு ராமாயணங்களும் ராமனது நிறம் கருப்பு என்றே குறிப்பிடுகின்றன.

ஆனால் சமய நூல்கள் ராமனின் நிறம் குறித்து வேறுபடுகின்றன. அவைகள் ராமனின் நிறம் கருப்பு என்று ஒத்துக் கொள்வதில்லை.  அயோத்தியில்,  51 அங்குலம் உயரத்தில் குழந்தை ராமர் சிலை அமைக்கப்பட புகழ் பெற்ற சிற்பிகளை அழைத்த போது ராமனின் நிறம் குறித்த விவாதம் ஆரம்பமாகியது. அருண்- கணேஷ் பட்  கர்நாடகாவின் சாம்பல் வண்ணம் கலந்த நீலக் கல்லில் ராமன் சிலையை செதுக்கினர். சத்தியநாராயணா என்பவர் ராஜஸ் தான் மார்பிள் கல்லில் வெள்ளை நிறத்தில் ராமர் சிலையை செதுக்கினார்.

2003 டிசம்பர் 22 இல் நடைபெற்ற கூட்டத் தில் ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பி னர்களில் 11 பேர் அருண் வடித்த சிலைக்கு ஆதரவாக இருந்தனர். சில மூத்த உறுப்பி னர்கள் வெள்ளை ராமர் சிலைக்கு சாதகமாக கருத்து தெரிவித்தார்களாம். தென் மாநிலங்களில் பாஜக நுழைவு மாநிலமான கர்நாடகத்திலும் தோற்கடிக் கப்பட்ட நிலையில், தென் மாநிலங்களைக் கவர்வதற்காக ஆர்எஸ்எஸ் கர்நாடகக் கல்லில் செதுக்கப்பட்ட சாம்பல் வண் ணம் கலந்த நீல நிற ராமர் சிலையை தேர்வு  செய்ததாக அரசியல் நோக்கர்கள் கூறு கின்றனர்.

காலம் மாறும்
1949 டிசம்பர் 22 ஆம் நாள் இந்து மகா சபையைச் சேர்ந்த அபிராம்தாஸ் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்தது தான் சர்ச்சைகளின் துவக்கமாக இருந்தது. உள்ளூர் நிர்வாகம் முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உ.பி., முதல்வர்  ஜி.பி.  பந்த் வரை  இந்து மகாசபைக்கு ஆதரவாக  இருந்தனர்.

அவர் அந்த குழந்தை ராமர் சிலையை அகற்றவில்லை. இன்று அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டி யதோடு அது முடிந்துள்ளது. அயோத்தியில் ஒருகாலத்தில் கோவில் மணி ஓசையும், சங்கொலியும் ,மசூதிக ளில் இருந்து புறப்பட்ட தொழுகைக்கான அழைப்புடன் ஒன்று கலந்து ஒலித்துள் ளன.

பிற்காலத்தில் தான் கட்டுக் கதைகளும், அவதூறுக் கதைகளும் புனையப்பட்டு விட்டன. காலச்சக்கரம் சூழலும் போது இன் றைய இந்துத்துவா பெரும்பான்மை வாதத் தின் ஆயுள் காலம் குறுகிய காலமாக அமை யும் என்றும், வெறுப்பையும் சகிப்புத் தன்மையற்ற போக்கையும் மத நல்லி ணக்க சகோதரத்துவம் வெல்லும் என்றும் நம்பிக்கை கொள்வோம்.

நன்றி: அவுட்லுக், பிப்,1,2024, 
தமிழில் தொகுப்பு : ம.கதிரேசன்