மிசோரம் சட்டப்பேரவை மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தலின் ஆரம்பமாக சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இன்று தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
சத்தீஸ்கரில் மட்டும் 2-ஆம் கட்ட தேர்தல் வரும் 17-ஆம் தேதி மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.
சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு நடந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் 3 ஆயிரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஆயிரம் போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மாலை 3 மணி வரையிலும், பிற பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.