ஒடிசா,ஜூன் 19- ஒடிசா மாநிலத்தில் காலரா தொற்றால் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் காலரா தொற்றால் அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். 1700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் தேன்கனல், பத்ராக், கியோஞ்சர் , கட்டாக் ஆகிய 7 மாவட்டங்களில் காலரா பரவ தொடங்கி உள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 10% காலரா பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜாஜ்பூரில் ஒரு திருமண வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது