india

img

சீத்தாராம் யெச்சூரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல்!

புதுதில்லி,செப்.27- மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தில்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு யெச்சூரியின் மனைவி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். யெச்சூரியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.