புதுதில்லி,செப்.27- தில்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்திப்பதற்காக நேற்று இரவு புதுதில்லி புறப்பட்டார்.
இன்று காலை நடைபெற்ற 45 நிமிட சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நிதி உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கான கோப்புகளை வழங்கியதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.