india

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஈரானில் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் மற்றும் ஈரானின் மிக முக்கியமான தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஹொசைன் சலாமி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி, ராணுவ மத்திய தலைமையகத்தின் தலைவரும், புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதியுமான ஜெனரல் கோலம் அலி ரஷித் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ராணுவத் தளபதிகள் மட்டுமின்றி இந்த  தாக்குதல்களில் பெரெடூன் அப்பாசி, முக மது மெஹ்தி தெஹ்ரான்சி, அஹ்மத்ரேசா ஜொல்பாகரி மற்றும் அப்துல் ஹமீது மினூ செஹர் போன்ற முக்கிய ஈரானிய அணு விஞ்ஞானிகளும் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், +98 9128109115 மற்றும் +98 9128109109 ஆகிய அவசரகால உதவி எண்களில் மூலம் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.