உமர் காலித்துக்கு 2 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது வடகிழக்கு தில்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை யில் 53 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700 பேர் காயமடைந்தனர். பாஜக, இந்துத்துவா குண்டர்கள் கட்டவிழ்த்துவிட்ட இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு ஆய்வு மாணவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்பட 9 பேரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
உமர் காலித்துக்கு பல முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது, நிபந்தனைகளுடன் டிச.16 முதல் 29 வரை 2 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது சகோதரி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
