மக்களவையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஏ.எம்.ஆரிஃப், காங்கிரஸ் (எம்) எம்.பி தாமஸ் சாழிகடன் ஆகிய 2 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக இதுவரை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சேர்த்து இதுவரை 141 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எதேச்சதிகாரத்தை மோடி அரசு அரங்கேற்றியுள்ளது. இந்த நிலையில், இன்று மக்களவையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ஏ.எம்.ஆரிஃப், காங்கிரஸ் (எம்) எம்.பி தாமஸ் சாழிகடன் ஆகிய 2 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.