இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அட்டவணையில், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், மகாராஷ்டிரத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 9,833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும், புதிதாக 10,112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது.