கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருவதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - புதுச்சேரி ரயில் உட்பட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயிலான பாக்மதி விரைவு ரயில் மோதிய விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டது, 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம், உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - புதுச்சேரி ரயில், விஜயவாடா - சென்னை சென்ட்ரல், கடப்பா - அரக்கோணம் உட்பட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.