தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் நலவாரிய ஆன்லைன் பதிவுகள் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதைக் காரணம் காட்டி பணப் பலன்களை வழங்க காலதாமதம் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் சிஐடியு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.